ETV Bharat / state

ஏலச்சீட்டு நடத்தி ஏமாற்றிய பெண்ணை கைது செய்யக்கோரி காவல்நிலையம் முற்றுகை - கிருஷ்ணகிரியில் காவல்நிலையம் முற்றுகை

கிருஷ்ணகிரி: ஏலச்சீட்டு நடத்தி ஏமாற்றிய பெண்ணை கைது செய்யக்கோரி 50க்கும் மேற்பட்ட பெண்கள் மத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

பெண்ணை கைது செய்யக்கோரி காவல்நிலையம் முற்றுகை
பெண்ணை கைது செய்யக்கோரி காவல்நிலையம் முற்றுகை
author img

By

Published : Dec 20, 2019, 4:32 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்து மத்தூர் கீழ் வீதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி(45). இவர் அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்களை வைத்து ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக ஏலச்சீட்டில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், பணம் கேட்டு வரும் பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும், பணம் தர முடியாது என மிரட்டுவதாகவும் அவரிடம் பாதிக்கப்பட்டவர்கள் வருத்தம் தெரிவித்தனர். இதனையடுத்து இன்று பணத்தை கேட்டு வந்த தேன், ராமசாமி, மணி ஆகியோர் மீது ஜெயந்தி வீட்டில் வளர்த்து வந்த 13 மாடுகளைப் பிடித்து சென்றதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பெண்ணை கைது செய்யக்கோரி காவல்நிலையம் முற்றுகை

தொடர்ந்து அவரிடம் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர். காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: ஆட்டுக்கறி வழங்காததால் கணவர் ஆத்திரம் - மனைவி எரித்துக் கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்து மத்தூர் கீழ் வீதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி(45). இவர் அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்களை வைத்து ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக ஏலச்சீட்டில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், பணம் கேட்டு வரும் பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும், பணம் தர முடியாது என மிரட்டுவதாகவும் அவரிடம் பாதிக்கப்பட்டவர்கள் வருத்தம் தெரிவித்தனர். இதனையடுத்து இன்று பணத்தை கேட்டு வந்த தேன், ராமசாமி, மணி ஆகியோர் மீது ஜெயந்தி வீட்டில் வளர்த்து வந்த 13 மாடுகளைப் பிடித்து சென்றதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பெண்ணை கைது செய்யக்கோரி காவல்நிலையம் முற்றுகை

தொடர்ந்து அவரிடம் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர். காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: ஆட்டுக்கறி வழங்காததால் கணவர் ஆத்திரம் - மனைவி எரித்துக் கொலை

Intro:ஏலச்சீட்டு நடத்தி ஏமாற்றிய பெண்ணை கைது செய்யக்கோரி 50ற்கும் மேற்பட்ட பெண்கள் மத்தூர் காவல் நிலையத்தை முற்றுகை
Body:ஏலச்சீட்டு நடத்தி ஏமாற்றிய பெண்ணை கைது செய்யக்கோரி 50ற்கும் மேற்பட்ட பெண்கள் மத்தூர் காவல் நிலையத்தை முற்றுகை


கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்து மத்தூர் கீழ் வீதியை சேர்ந்தவர் ஜெயந்தி (45). இவர் மத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்களை வைத்து ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக ஏலச்சீட்டில் பல லட்ச ரூபாய் அளவிற்கு மோசடி செய்து வந்ததாக கூறப்படுகிறது. பணம் கேட்டு வரும் பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும், பணம் தர முடியாது என மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் இன்று காலை பணத்தை கேட்டு வந்த தேன், ராமசாமி மற்றும் மணி ஆகிய மூவரும் ஜெயந்தி வீட்டில் வளர்த்து வந்த 13 மாடுகளை பிடித்து சென்றதாக கூறி, ஜெயந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அதன் பேரில் வந்த மத்தூர் காவலர்கள் பணம் கேட்டு வந்தவர்களை மிரட்டியதாகவும் கூறி 50ற்கும் மேற்பட்ட பெண்கள் மத்தூர் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டனர். பின்னர் ஏலச்சீட்டு நடத்தி ஏமாற்றிய ஜெயந்தியை கைது செய்ய கோரிக்கை வைத்தனர். உள்ளாட்சி மன்ற தேர்தல் நடப்பதாகவும், தேர்தல் முடிந்ததும் ஏலச்சீட்டு நடத்தியவரை விசாரனை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும் காவல் ஆய்வாளர் உறுதியளித்ததை அடுத்து கூட்டத்தினர் கலைந்து சென்றனர். Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.