ETV Bharat / state

செம்மறி ஆட்டை சுற்றிவளைத்த மலைப்பாம்பை வனப்பகுதியில் விட்ட வனத்துறையினர் - மலைப்பாம்பு

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே செம்மறி ஆட்டை விழுங்க முயன்ற மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினர் அதனை பத்திரமாக வனப்பகுதியில் விட்டனர்.

Python
Python
author img

By

Published : Dec 7, 2019, 10:09 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள ஜோதிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடசாமி. இவர் முப்பதுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் ஜோதிபுரம் கிராமத்தின் பின்புறமாக உள்ள வயல்பகுதிகளை தனது செம்மறி ஆடுகளை மேய்த்து வந்துள்ளார். அப்போது அங்கு மலைப்பாம்பு ஒன்று வந்துள்ளது.

செம்மறி ஆட்டை சுற்றிவளைத்த மலைப்பாம்பு

இதனை பார்த்த அனைத்து ஆடுகளும் ஒடின. ஆனால் ஒரு ஆட்டினை பிடித்த மலைப்பாம்பு அதன் உடலைச் சுற்றி நெருக்கியதில் ஆடு உயரிழந்தது.

இதனைப் பார்த்த வெங்கடசாமி கூச்சலிட்டார். இவரின் சத்தத்தைக்கேட்ட கிராமத்தினர் அங்கு வந்தனர். அவர்கள் ஓசூர் கோட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை பிடித்து அடர் வனப்பகுதியில் விட பாதுகாப்பாக கொண்டு சென்றனர். உயிரழந்த ஆட்டின் மதிப்பு ரூபாய் 8 ஆயிரம் என வெங்கடசாமி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள ஜோதிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடசாமி. இவர் முப்பதுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் ஜோதிபுரம் கிராமத்தின் பின்புறமாக உள்ள வயல்பகுதிகளை தனது செம்மறி ஆடுகளை மேய்த்து வந்துள்ளார். அப்போது அங்கு மலைப்பாம்பு ஒன்று வந்துள்ளது.

செம்மறி ஆட்டை சுற்றிவளைத்த மலைப்பாம்பு

இதனை பார்த்த அனைத்து ஆடுகளும் ஒடின. ஆனால் ஒரு ஆட்டினை பிடித்த மலைப்பாம்பு அதன் உடலைச் சுற்றி நெருக்கியதில் ஆடு உயரிழந்தது.

இதனைப் பார்த்த வெங்கடசாமி கூச்சலிட்டார். இவரின் சத்தத்தைக்கேட்ட கிராமத்தினர் அங்கு வந்தனர். அவர்கள் ஓசூர் கோட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை பிடித்து அடர் வனப்பகுதியில் விட பாதுகாப்பாக கொண்டு சென்றனர். உயிரழந்த ஆட்டின் மதிப்பு ரூபாய் 8 ஆயிரம் என வெங்கடசாமி தெரிவித்தார்.

Intro:ஓசூர் அருகே செம்மறி ஆட்டை விழுங்க முயன்ற மலைப்பாம்பு,ஆடு உயிரிழப்பு, மலைப்பாம்பினை மீட்ட வனத்துறையினர் பின்பு காட்டில் விடுவிப்பு.
Body:ஓசூர் அருகே செம்மறி ஆட்டை விழுங்க முயன்ற மலைப்பாம்பு,ஆடு உயிரிழப்பு, மலைப்பாம்பினை மீட்ட வனத்துறையினர் பின்பு காட்டில் விடுவிப்பு.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஒன்னல்வாடியில் உள்ள ஜோதிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசாமி(52), இவர் 30க்கும் அதிகமான செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.வழக்கம் போல இன்றும், ஜோதிபுரம் கிராமத்தின் பின்புறமாக உள்ள வயல்பகுதிகளை செம்மறி ஆடுகளை மேய்த்து வந்துள்ளார்.


அனைத்து ஆடுகளும் அலறியடித்து ஓடியநிலையில், ஒரு ஆட்டினை பிடித்த மலைப்பாம்பு உடல்முழுவதும் சுற்றியவாறு உடலை நெறுக்கி உள்ளது, ஆட்டினை சுற்றிய மலைப்பாம்பை வெங்கடசாமியால் பிரிக்க முடியாததால் கூச்சலிட்டுள்ளார், சத்தம்கேட்டு அப்பகுதியினர் வருவதகுள்ளாக ஆடு உயிரிழந்ததையடுத்து,
ஜோதிபுரம் கிராமத்தினர் ஓசூர் வனக்கோட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், விரைந்து வனத்துறையினர் மலைப்பாம்பினை மீட்டு அடர்வனப்பகுதிக்குள் கொண்டுவிட பிடித்துச்சென்றனர்.


உயிரிழந்த செம்மறிந்த ஆட்டின் மதிப்பு 8 ஆயிரம் ரூபாய் இருக்கலாம் என ஆட்டின் உரிமையாளர் வெங்கடசாமி தெரிவித்தார். ஆட்டினை மலைப்பாம்பு விழுங்க முயற்சிப்பதாக பரவிய தகவலால் கிராம மக்கள் ஆர்வமுடன் காண குவிந்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.