ETV Bharat / state

அதிகரிக்கும் கரோனா தொற்று: `பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்`- பீலா ராஜேஷ்!

author img

By

Published : May 9, 2021, 12:45 PM IST

கிருஷ்ணகிரி: நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ் கேட்டுக்கொண்டார்.

அதிகரிக்கும் கரோனா தொற்று
அதிகரிக்கும் கரோனா தொற்று

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட கரோனா சிறப்பு அலுவலர் பீலா ராஜேஸ் இன்று (மே 08) கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வு நடத்தினர்.

ஆய்வு கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயிரத்து 532 படுக்கை வசதி உள்ளது. இதில் ஆக்சிஜன் வசதியுடன் ஆயிரத்து 316 படுக்கைகள் உள்ளது.

இதில் அரசு, தனியார் மருத்துவமனையில் மொத்தம் ஆயிரத்து 19 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மீதம் 33 விழுக்காடு படுக்கைகள் தயார் நிலையில் கூடுதலாக உள்ளது. அதே போல் ஆக்சிஜன் கையிறுப்பை பொறுத்தவரை மொத்தமாக 20கிலோ லிட்டர் வசதி உள்ளது.

இதில் தினசரி 4.75 லிட்டர் மட்டும் பயன்படுத்தப்படுகிறது, அதேபோல் 40லிட்டர் அளவு கொண்ட `டி` வகை சிலிண்டர் 518 உள்ளது. இதில் தினசரி 175 சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றது என்றார்.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 87 விழுக்காடு முன்கள பணியாளர்கள், 78 விழுக்காடு மற்ற நோய் பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் 80 விழுக்காடு சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

அதே போல் கரோனா விதிமுறைகளை மீறியதாக இதுவரை தினசரி 2 லட்சம் வீதம் 98 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட கரோனா சிறப்பு அலுவலர் பீலா ராஜேஸ் இன்று (மே 08) கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வு நடத்தினர்.

ஆய்வு கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயிரத்து 532 படுக்கை வசதி உள்ளது. இதில் ஆக்சிஜன் வசதியுடன் ஆயிரத்து 316 படுக்கைகள் உள்ளது.

இதில் அரசு, தனியார் மருத்துவமனையில் மொத்தம் ஆயிரத்து 19 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மீதம் 33 விழுக்காடு படுக்கைகள் தயார் நிலையில் கூடுதலாக உள்ளது. அதே போல் ஆக்சிஜன் கையிறுப்பை பொறுத்தவரை மொத்தமாக 20கிலோ லிட்டர் வசதி உள்ளது.

இதில் தினசரி 4.75 லிட்டர் மட்டும் பயன்படுத்தப்படுகிறது, அதேபோல் 40லிட்டர் அளவு கொண்ட `டி` வகை சிலிண்டர் 518 உள்ளது. இதில் தினசரி 175 சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றது என்றார்.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 87 விழுக்காடு முன்கள பணியாளர்கள், 78 விழுக்காடு மற்ற நோய் பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் 80 விழுக்காடு சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

அதே போல் கரோனா விதிமுறைகளை மீறியதாக இதுவரை தினசரி 2 லட்சம் வீதம் 98 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.