ETV Bharat / state

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 1,524 பேருக்கு பணி நியமன ஆணை - கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி: அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 1,524 பேருக்கு பணி நியமன ஆணைகளை கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வழங்கினார்.

EMPLOYMENT OPPORTUNITY CAMP
author img

By

Published : Jul 28, 2019, 10:48 AM IST

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் ஒன்று கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது.

இதில், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், ஓசூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 2950-க்கும் மேற்பட்டவர்களும், வேலைவாய்ப்பு வழங்கும் 105 தனியார் நிறுவனங்களும் கலந்துகொண்டனர்.

வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பணிக்கு தேர்வானவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவிற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தலைமை வகித்தார்.

EMPLOYMENT OPPORTUNITY CAMP  வேலைவாய்ப்பு அலுவலகம்  பணிநியமான ஆணை  கிருஷ்ணகிரி  Krishnagiri
வேலை

அப்போது 1,524 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கி பேசிய அவர், "படித்த இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை 1,559 பேர் தனியார் துறையில் சேர்ந்துள்ளனர்.

EMPLOYMENT OPPORTUNITY CAMP  வேலைவாய்ப்பு அலுவலகம்  பணிநியமான ஆணை  கிருஷ்ணகிரி  Krishnagiri
வேலை

மேலும் தேர்வு செய்யப்படாதவர்களுக்கு தனித்திறன்களை வளர்த்துக்கொள்வதற்காக திறன் மேம்பாட்டு மையங்கள் மூலம் இலவச பயிற்சிகள அளிக்கப்பட்டுவருகின்றன. இதுமட்டுமல்லாமல் சுயதொழில் செய்ய விரும்புபவர்களுக்கு அரசின் மானியக்கடன்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம்" என்றார்.

இளைஞர்கள், பெண்கள் தங்களது வாழ்வில் முன்னேற ஒரு நல்வாய்ப்பாக இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் அமைந்துள்ளது என்றார்.

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் ஒன்று கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது.

இதில், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், ஓசூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 2950-க்கும் மேற்பட்டவர்களும், வேலைவாய்ப்பு வழங்கும் 105 தனியார் நிறுவனங்களும் கலந்துகொண்டனர்.

வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பணிக்கு தேர்வானவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவிற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தலைமை வகித்தார்.

EMPLOYMENT OPPORTUNITY CAMP  வேலைவாய்ப்பு அலுவலகம்  பணிநியமான ஆணை  கிருஷ்ணகிரி  Krishnagiri
வேலை

அப்போது 1,524 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கி பேசிய அவர், "படித்த இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை 1,559 பேர் தனியார் துறையில் சேர்ந்துள்ளனர்.

EMPLOYMENT OPPORTUNITY CAMP  வேலைவாய்ப்பு அலுவலகம்  பணிநியமான ஆணை  கிருஷ்ணகிரி  Krishnagiri
வேலை

மேலும் தேர்வு செய்யப்படாதவர்களுக்கு தனித்திறன்களை வளர்த்துக்கொள்வதற்காக திறன் மேம்பாட்டு மையங்கள் மூலம் இலவச பயிற்சிகள அளிக்கப்பட்டுவருகின்றன. இதுமட்டுமல்லாமல் சுயதொழில் செய்ய விரும்புபவர்களுக்கு அரசின் மானியக்கடன்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம்" என்றார்.

இளைஞர்கள், பெண்கள் தங்களது வாழ்வில் முன்னேற ஒரு நல்வாய்ப்பாக இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் அமைந்துள்ளது என்றார்.

Intro:கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட நிருவாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்Body:கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட நிருவாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தினர். இம்முகாமில் வேலைவாய்ப்பு வழங்கும் 95 தனியார் நிறுவனங்களும், திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு அளிக்கும் 10 தனியார் நிறுவனங்கள் மற்றும் சுயதொழில் தொடங்க அரசு அளிக்கும் மானிய கடன்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர்,ஓசூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 2950க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பணிக்கு தேர்வானவர்களுக்கு ஆணைகள் வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவிற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தலைமை வகித்தார். மாவட்ட தொழில் மைய மேலாளர் பிரசன்னாபாலமுருகன் ஆகியோர் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினர். இவ்விழாவில் 1524 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பேசியதாவது: படித்த இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை வரை 1559 பேர் தனியார்த்துறையில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பணிக்கு தேர்வாகி உள்ளனர். தேர்வு செய்யப்படாதவர்களுக்கு தனித்திறன்கள் வளர்த்துக்கொள்ள ஒரு வாய்ப்பாக, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கும் நிறுவனங்கள் மூலம் இலவசமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்படும். விருப்பமுள்ளவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.
மேலும், சுயத்தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படும் மானியக்கடன்கள் குறித்து விழிப்புணர்வு முகாமில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இளைஞர்கள், பெண்கள் தங்களது வாழ்வில் முன்னேற ஒரு நல்வாய்ப்பாக இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் அமைந்துள்ளது என்றார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.