ETV Bharat / state

தலையில் கல்லைப் போட்டு தாயை கொன்ற மகன் - கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி: கோயிலுக்கு செல்வதாகக் கூறி தாயை அழைத்துச்சென்ற மகன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய் கொலை - தற்கொலை செய்ய முயற்சித்த மகன்
author img

By

Published : Jul 16, 2019, 11:38 PM IST

சேலம் நெத்திமேட்டைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது 28). இவர் ரப்பர் ஸ்டாம்ப் செய்யக்கூடிய கடை நடத்தி வருகிறார். இவரது தாய் வைரம்மாள் (55). குடும்பத் தகராறு காரணமாக வைரம்மாள் தன் மகன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் காரணமாக தாய் - மகன் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை கோயிலுக்கு சென்று வரலாம் என்று வைரம்மாளை வாடகை காரில் அழைத்துக் கொண்டு கார்த்தி கிருஷ்ணகிரிக்கு சென்றார். பின்பு இருவரும் அங்குள்ள தர்காவிற்கு செல்வதற்காக நடந்து சென்றனர். வழியில் அவர்கள் இருவரிடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கார்த்தி தாய் வைரம்மாளை கீழே தள்ளி அங்கிருந்த கல்லை தூக்கி தலையில் போட்டார். இதில் வைரம்மாள் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பலியானர்.

தலையில் கல்லைப் போட்டு தாய் கொலை


இதை வழியில் சென்றவர்கள் பார்த்து கூச்சலிட, கார்த்தியும் அருகில் இருந்த ஒரு குச்சியை எடுத்து தனது கழுத்தில் குத்தி தற்கொலைக்கு முயன்றார். இது குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கார்த்தியை கைது செய்து சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் வைரம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குடும்ப தகராறில் தாயின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த மகன், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் நெத்திமேட்டைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது 28). இவர் ரப்பர் ஸ்டாம்ப் செய்யக்கூடிய கடை நடத்தி வருகிறார். இவரது தாய் வைரம்மாள் (55). குடும்பத் தகராறு காரணமாக வைரம்மாள் தன் மகன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் காரணமாக தாய் - மகன் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை கோயிலுக்கு சென்று வரலாம் என்று வைரம்மாளை வாடகை காரில் அழைத்துக் கொண்டு கார்த்தி கிருஷ்ணகிரிக்கு சென்றார். பின்பு இருவரும் அங்குள்ள தர்காவிற்கு செல்வதற்காக நடந்து சென்றனர். வழியில் அவர்கள் இருவரிடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கார்த்தி தாய் வைரம்மாளை கீழே தள்ளி அங்கிருந்த கல்லை தூக்கி தலையில் போட்டார். இதில் வைரம்மாள் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பலியானர்.

தலையில் கல்லைப் போட்டு தாய் கொலை


இதை வழியில் சென்றவர்கள் பார்த்து கூச்சலிட, கார்த்தியும் அருகில் இருந்த ஒரு குச்சியை எடுத்து தனது கழுத்தில் குத்தி தற்கொலைக்கு முயன்றார். இது குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கார்த்தியை கைது செய்து சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் வைரம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குடும்ப தகராறில் தாயின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த மகன், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Intro:கிருஷ்ணகிரியில் பரபரப்பு
தலையில் கல்லைப்போட்டு தாய் படுகொலை
மகன் தற்கொலை முயற்சி.Body:கிருஷ்ணகிரியில் தலையில் கல்லைப் போட்டு தாயை படுகொலை செய்த மகன் தற்கொலைக்கு முயன்றார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் நெத்திமேட்டைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது 28). இவர் ரப்பர் ஸ்டாம்ப் செய்ய கூடிய கடை நடத்தி வருகிறார். இவரது தாய் வைரம்மாள் (55). இவர் சேலத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் மகன் கார்த்தி மீது புகார் கொடுத்தார். இதன் காரணமாக தாய் - மகன் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை கோயிலுக்கு சென்று வரலாம் என்று வைரம்மாளை வாடகை காரில் அழைத்து கொண்டு கார்த்தி கிருஷ்ணகிரிக்கு வந்தார். கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் தாயுடன் கீழே இறங்கிய கார்த்தி காரை திரும்ப அனுப்பி வைத்தார். தொடர்ந்து தாயை அழைத்துக் கொண்டு அந்த பகுதியில் உள்ள தர்காவிற்கு கார்த்தி சென்றார். அந்த நேரம் அவர்கள் 2 பேர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்தி அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தாய் வைரம்மாளை கீழே தள்ளி அங்கிருந்த கல்லை தூக்கி தாயின் தலையில் போட்டார். இதில் வைரம்மாள் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். தாயை கொலை செய்த கார்த்தி அருகில் இருந்த ஒரு குச்சியை எடுத்து தனது கழுத்தில் குத்தி தற்கொலைக்கு முயன்றார். இது குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கார்த்தியை கைது செய்தனர். மேலும் வைரம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கார்த்தியை கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கிருஷ்ணகிரியில் குடும்ப தகராறில் தாயின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த மகன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.