ETV Bharat / state

மாதாந்திர ஓய்வூதியம், வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் - வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Oct 11, 2019, 11:47 PM IST

கிருஷ்ணகிரியில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாதாந்திர ஓய்வூதியம், வீட்டு மனை பட்டா உள்ளிட்டவை வழங்கக்கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் வெங்காயம், சமையல் எண்ணெய் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து வட்டாட்சியர் மனுக்களை பெற்றுக்கொண்டு உடனடி தீர்வு அளிக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

கிருஷ்ணகிரியில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாதாந்திர ஓய்வூதியம், வீட்டு மனை பட்டா உள்ளிட்டவை வழங்கக்கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் வெங்காயம், சமையல் எண்ணெய் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து வட்டாட்சியர் மனுக்களை பெற்றுக்கொண்டு உடனடி தீர்வு அளிக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


இதையும் படிங்க: ஆத்தா நான் நீச்சல் அடிக்க கத்துக்கிட்டேன்... அனுபம் கேர் வெளியிட்ட நீச்சல் வீடியோ!

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம்
ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம்.
Body:கிருஷ்ணகிரி மாவட்டம்
ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம்.

மத்திய மாநில அரசுகள் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது 60 வயது பூர்த்தி அடைந்த அனைவருக்கும் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் வீடில்லா ஏழை மக்கள் அனைவருக்கும் வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தனர் . ஆனால் தேர்தல் முடிந்து 100 நாளை மத்திய, மாநில அரசுகள் விழா எடுத்து வருகிறது. ஆனால் ஏழை மக்களுக்கு கிடைக்க வேண்டிய மாதாந்திர ஓய்வூதிய திட்டம், இலவச வீட்டுமனைப் பட்டா எவருக்கும் கிடைக்கவில்லை. அதனை கண்டித்தும் ஊரக வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி வழங்கவும் கோரிக்கை வைத்தனர்.

மேலும் மக்களின் சமையலுக்கு அத்தியாவசிமாக தேவைப்படும் பூண்டு விலை 200 ம் வெங்காயம் கிலோ 100 க்கும் விற்கும் சமையல் எண்ணெய் விலை உயர்வு போன்ற நிலை உள்ளது. அதனை உடனடியாக விலை குறைப்பு செய்ய வேண்டும் என்றும் ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சுமா‌ர் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டு கோசங்கள் எழுப்பி வட்டாட்சியரிடம் தங்களின் கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் போன்றோர் கலந்து கொண்டனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.