ETV Bharat / state

மலேசியாவில் காணாமல்போன மகனை மீட்டுத் தரக்கோரி குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை

author img

By

Published : Mar 2, 2021, 7:32 PM IST

கிருஷ்ணகிரி: மலேசியாவில் காணாமல்போன எலக்ட்ரீசியனான தனது மகனை மீட்டுத் தர வேண்டுமென குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

கோரிக்கை மனு அளித்த குடும்பத்தினர்
கோரிக்கை மனு அளித்த குடும்பத்தினர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரியைச் சேர்ந்தவர் வனத் துறை அலுவலர் செல்வராஜ் (55), இவரின் மகன் ஞானவேல் (37), எலக்ட்ரீசியன் பணிக்கு இரண்டாண்டுகள் ஒப்பந்தத்தில் மலேசியா, கோலாலம்பூர் பகுதிகளுக்கு வேலைக்குச் சென்றுள்ளார்.

ஞானவேல் தனது குடும்பத்தினருக்கு பணம் அனுப்ப வேண்டுமென சக தொழிலாளரான முசிறியைச் சேர்ந்த நவீன் என்பவரிடம் இந்திய மதிப்பில் 69,000 ரூபாயை அனுப்புமாறு அவரிடம் தொகையை வழங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுவரை ஞானவேல் குடும்பத்தாருக்கு பணம் வந்து சேரவில்லை என்கிற நிலையில் பிப்ரவரி 21 அன்று காலை ஞானவேலை, நவீன் அழைத்துச் சென்றதாக அறையில் தங்கியிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

கோரிக்கை மனு அளித்த குடும்பத்தினர்
கோரிக்கை மனு அளித்த குடும்பத்தினர்

ஆட்சியரகத்தில் புகார்

பிப்பவரி 21ஆம் தேதிமுதல் ஞானவேல் குறித்து எந்தத் தகவலும் தெரியாத நிலையில் மலேசியாவில் காணாமல்போன எலக்ட்ரீசியன் ஞானவேலை கண்டுபிடித்துத் தருமாறு குடும்பத்தினர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரியைச் சேர்ந்தவர் வனத் துறை அலுவலர் செல்வராஜ் (55), இவரின் மகன் ஞானவேல் (37), எலக்ட்ரீசியன் பணிக்கு இரண்டாண்டுகள் ஒப்பந்தத்தில் மலேசியா, கோலாலம்பூர் பகுதிகளுக்கு வேலைக்குச் சென்றுள்ளார்.

ஞானவேல் தனது குடும்பத்தினருக்கு பணம் அனுப்ப வேண்டுமென சக தொழிலாளரான முசிறியைச் சேர்ந்த நவீன் என்பவரிடம் இந்திய மதிப்பில் 69,000 ரூபாயை அனுப்புமாறு அவரிடம் தொகையை வழங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுவரை ஞானவேல் குடும்பத்தாருக்கு பணம் வந்து சேரவில்லை என்கிற நிலையில் பிப்ரவரி 21 அன்று காலை ஞானவேலை, நவீன் அழைத்துச் சென்றதாக அறையில் தங்கியிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

கோரிக்கை மனு அளித்த குடும்பத்தினர்
கோரிக்கை மனு அளித்த குடும்பத்தினர்

ஆட்சியரகத்தில் புகார்

பிப்பவரி 21ஆம் தேதிமுதல் ஞானவேல் குறித்து எந்தத் தகவலும் தெரியாத நிலையில் மலேசியாவில் காணாமல்போன எலக்ட்ரீசியன் ஞானவேலை கண்டுபிடித்துத் தருமாறு குடும்பத்தினர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.