கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே உள்ள ராமசந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த எல்லேஷ் - ஜோதி ஜோடி கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில், எல்லேஷ் வீட்டில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் கெலமங்கலம் அருகே உள்ள பைரமங்கலம் என்ற இடத்தில் குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.