ETV Bharat / state

காட்டு யானைகளை, வனப்பகுதிக்கு விரட்ட கும்கி யானைகள் வரவழைப்பு!

author img

By

Published : Aug 22, 2019, 6:45 AM IST

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் இரண்டு காட்டு யானைகளைப் பிடிக்க, கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

காட்டு யானை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சூளகிரி, பாகலூர் பகுதிகளில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சுற்றித்திரியும் குரோபார், சின்ன கொம்பன் ஆகிய இரு காட்டுயானைகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதற்காக மாரியப்பன், பரணி என்னும் இரு கும்கி யானைகள் முதுமலை வனப்பகுதியில் இருந்து ஓசூர் பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

ஓசூர் வனச்சரகத்திற்குட்பட்ட சானமாவு, பேரிகை மற்றும் பேராண்டப்பள்ளி வனப்பகுதியில் 11 காட்டு யானைகள் சுற்றி திரிகின்றன. இந்த யானைகளிலிருந்து பிரிந்த குரோபார் மற்றும் சின்ன கொம்பன் எனப்படும் இரண்டு காட்டுயானைகள் பாகலூர் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் சுற்றி வருகின்றன. தற்போது கெலவரப்பள்ளி அணையின் கரையோரத்தில் உள்ள தைல மரதோப்பில் இந்த இரு காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.

காட்டு யானைகளை, வனப்பகுதிக்கு விரட்ட கும்கி யானைகள் வரவழைப்பு

கடந்த ஆண்டு இந்த குரோபார் எனப்படும் காட்டு யானை மூன்று பேரை மிதித்துக் கொன்றது. அதனைத் தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தி குரோபார் யானையைப் பிடித்துச் சென்று 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பீலிகுண்டு அருகே காவிரி கரையோர வனப்பகுதியில் விட்டனர். ஆனால், இந்தக் காட்டுயானை மீண்டும் ஓசூர் வனப்பகுதிக்குள் நுழைந்தது.

தற்போது, இந்த இரண்டு கும்கி யானைகளின் உதவியுடன் வனத் துறையினர், குரோபார் யானையைப் பிடித்து முதுமலை காட்டுக்குக் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக வனத்துறையினருடன் காவல்துறையினரும் இணைந்து யானையைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சூளகிரி, பாகலூர் பகுதிகளில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சுற்றித்திரியும் குரோபார், சின்ன கொம்பன் ஆகிய இரு காட்டுயானைகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதற்காக மாரியப்பன், பரணி என்னும் இரு கும்கி யானைகள் முதுமலை வனப்பகுதியில் இருந்து ஓசூர் பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

ஓசூர் வனச்சரகத்திற்குட்பட்ட சானமாவு, பேரிகை மற்றும் பேராண்டப்பள்ளி வனப்பகுதியில் 11 காட்டு யானைகள் சுற்றி திரிகின்றன. இந்த யானைகளிலிருந்து பிரிந்த குரோபார் மற்றும் சின்ன கொம்பன் எனப்படும் இரண்டு காட்டுயானைகள் பாகலூர் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் சுற்றி வருகின்றன. தற்போது கெலவரப்பள்ளி அணையின் கரையோரத்தில் உள்ள தைல மரதோப்பில் இந்த இரு காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.

காட்டு யானைகளை, வனப்பகுதிக்கு விரட்ட கும்கி யானைகள் வரவழைப்பு

கடந்த ஆண்டு இந்த குரோபார் எனப்படும் காட்டு யானை மூன்று பேரை மிதித்துக் கொன்றது. அதனைத் தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தி குரோபார் யானையைப் பிடித்துச் சென்று 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பீலிகுண்டு அருகே காவிரி கரையோர வனப்பகுதியில் விட்டனர். ஆனால், இந்தக் காட்டுயானை மீண்டும் ஓசூர் வனப்பகுதிக்குள் நுழைந்தது.

தற்போது, இந்த இரண்டு கும்கி யானைகளின் உதவியுடன் வனத் துறையினர், குரோபார் யானையைப் பிடித்து முதுமலை காட்டுக்குக் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக வனத்துறையினருடன் காவல்துறையினரும் இணைந்து யானையைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் இரண்டு காட்டு யானைளைப் பிடிக்க கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு அதற்க்கான பணிகள் நடைபெற்று வருகிறது.Body:


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சூளகிரி, பாகலூர் பகுதிகளில் கடந்த ஒரு மாததிற்கு மேலாக சுற்றித்திரியும் இரு காட்டுயானைகளில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் குரோபார் மற்றும் சின்ன கொம்பன் யன அழைக்கப்படும் யானையைப் பிடிக்க மாரியப்பன் மற்றும் பரணி யன இரு கும்கி யானைகளை முதுமலை வனப்பகுதியில் இருந்து ஓசூர் பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

ஓசூர் வனச்சரகத்திற்குட்பட்ட சானமாவு, பேரிகை மற்றும் பேராண்டப்பள்ளி வனப்பகுதியில் 11 காட்டு யானைகள் சுற்றி திரிகின்றன. இந்த யானைகளிலிருந்து பிரிந்த குரோபார் மற்றும் சின்ன கொம்பன் எனப்படும் இரண்டு காட்டுயானைகள் பாகலூர் சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகளில் சுற்றி வருகின்றன. தற்போது கெலவரப்பள்ளி அணையின் கரையோரத்தில் உள்ள தைல மரதோப்பில் இரு காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.



கடந்த ஆண்டு இந்த குரோபார் எனப்படும் காட்டு யானை 3 பேரை மிதித்துக் கொன்றது. அனைத் தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தி குரோபார் யானையைப் பிடித்துச் சென்று 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பீலிகுண்டு அருகே காவிரிக் கரையோர வனப்பகுதியில் விட்டனர்.
ஆனால், இந்தக் காட்டுயானை மீண்டும் ஓசூர் வனப் பகுதிக்குள் நுழைந்தது. அந்த யானை தற்போது, ஓசூர், பாகலூர் உள்ளிட்ட சுற்றுப்புறக் கிராமங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் முகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நிலையில் கடந்த வாரம் தமிழ எல்லையை கடந்து சென்று கர்நாடக மாநிலத்தின் திருசங்கம் கிராமத்து பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு நுழைய முற்படும்போது அப்பகுதி கிராமவாசிகள் ஒன்று கூடி சத்தம் எழுப்பி பட்டாசுகளை வெடித்தும் இரு காட்டு யானைகளை விரட்டும் போது அப்பகுதி விவசாயியான அன்னையப்பா என்பதை யானை தாக்கியதில் உயிரிழந்தார், இதை அடுத்து அந்த இரு யானைகளும் மீண்டும் தமிழக பகுதிக்குள் நுழைத்து பொதுமக்களை அச்சுருத்தி வரும் நிலையில், குரோபார் காட்டுயானையை, சின்ன கொம்பன் யானையிடமிருந்து தனியாகப் பிரித்து, மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டு வருகின்றனர். இல்லையெனில் இரண்டு யானைகளுக்கும் மயக்க ஊசி போட்டு பிடிக்க முடிவு செய்துள்ளார்.


இதற்காக முதுமலை டாப்சிலிப் வனப் பகுதியில் இருந்து மாரியப்பன் மற்றும் பரணி யன இருகும்கி யானைகளை ஓசூர் வனப்பகுதிக்கு கொண்டு வர வைக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு கும்கி யானைகளின் உதவியுடன் வனத் துறையினர் குரோபார் யானையைப் பிடித்து முதுமலை காட்டுக்குக் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக வனத்துறையினருடன் போலீஸாரும் இனைந்து பொது மக்களை யானைகள் இருக்கும் பகுதிக்குள் வரவிடாமள் தடுத்து நிறுத்த போலீஸார் உதவியுடன் தயாராகி வருகின்றனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.