ETV Bharat / state

மதுபோதையில் அண்ணனை கட்டையால் அடித்துக்கொன்ற தம்பி!

author img

By

Published : Oct 7, 2019, 3:43 PM IST

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அடுத்த சாசானூர் கிராமத்தில் மதுபோதையில் நடந்த சொத்துத் தகராற்றில், அண்ணனை கட்டையால் அடித்து தம்பி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணனை கொலை செய்த தம்பி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சாசானூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன்கள் மூர்த்தி (32), சீனிவாசன் (27). மூர்த்திக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அண்ணன், தம்பி இருவருமே அருகருகே வீட்டில் வசித்து வருகிறார்கள். இருவரும் கட்டட வேலை செய்து வருகிறார்கள்.

நேற்றிரவு மூர்த்தி, தனது தம்பி சீனிவாசனிடம் மதுபோதையில் தங்களது சொத்தான ஒன்றரை ஏக்கர் நிலத்தைப் பிரித்துக்கொடு என்று கேட்டு தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த சீனிவாசன், அண்ணனின் தலையில் கட்டையால் அடித்ததில் மூர்த்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தாகத் தெரிகிறது.

மருத்துவமனையில் உறவினர்கள்

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஊத்தங்கரை காவல்துறையினர், இறந்த மூர்த்தியின் உடலைக் கைப்பற்றி, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு சீனிவாசனைக் கைது செய்துள்ளனர். இந்த கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'ரோஜா'வுடன் மீண்டும் இணையும் அரவிந்த்சாமி!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சாசானூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன்கள் மூர்த்தி (32), சீனிவாசன் (27). மூர்த்திக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அண்ணன், தம்பி இருவருமே அருகருகே வீட்டில் வசித்து வருகிறார்கள். இருவரும் கட்டட வேலை செய்து வருகிறார்கள்.

நேற்றிரவு மூர்த்தி, தனது தம்பி சீனிவாசனிடம் மதுபோதையில் தங்களது சொத்தான ஒன்றரை ஏக்கர் நிலத்தைப் பிரித்துக்கொடு என்று கேட்டு தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த சீனிவாசன், அண்ணனின் தலையில் கட்டையால் அடித்ததில் மூர்த்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தாகத் தெரிகிறது.

மருத்துவமனையில் உறவினர்கள்

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஊத்தங்கரை காவல்துறையினர், இறந்த மூர்த்தியின் உடலைக் கைப்பற்றி, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு சீனிவாசனைக் கைது செய்துள்ளனர். இந்த கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'ரோஜா'வுடன் மீண்டும் இணையும் அரவிந்த்சாமி!

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாசானூர் கிராமத்தில் குடிபோதையில் பயங்கரம் சொத்து தகராறு கட்டையால் அடித்து அண்ணன் கொலை தம்பி கைது.Body:கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாசானூர் கிராமத்தில் குடிபோதையில் பயங்கரம் சொத்து தகராறு கட்டையால் அடித்து அண்ணன் கொலை தம்பி கைது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சாசானூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன்கள் மூர்த்தி வயது 32. இவருடைய தம்பி சீனிவாசன் வயது 27. மூர்த்திக்கு திருமணம் ஆகவில்லை. இருவரும் அருகருகே வீட்டில் வசித்து வருகிறார்கள்.இருவரும் மேஸ்திரி வேலை செய்து வருகிறார்கள்.நேற்று இரவு மூர்த்தி தனது தம்பி சீனிவாசனிடம் குடிபோதையில் தங்களது சொத்தான ஒன்றறை ஏக்கர் (1-1/2 )பிரித்துக்கொடு என கேட்டு தகராறு செய்தார். ஆத்திரமடைந்த சீனிவாசன் கட்டையால் அண்ணனின் தலையில் அடித்ததில் மூர்த்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தாக தெரிகிறது.இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஊத்தங்கரை போலீசார் இறந்த மூர்த்தி உடலை கைப்பற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவ மனைக்குப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர் .மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு சீனிவாசனை கைது செய்தனர் .இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.