ETV Bharat / state

ஓசூரில் பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து

author img

By

Published : Aug 28, 2022, 10:48 PM IST

ஓசூரில் பட்டாசு கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் லட்சக்கணக்கான மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசமானது.

தீ விபத்து
தீ விபத்து

கிருஷ்ணகிரி: ஓசூரில் பெங்களூர் செல்லும் சாலை அருகே வடிவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை 4 மணி அளவில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்தால் கடை முழுவதும் பட்டாசுகள் வெடித்து புகை மூட்டமாக காணப்பட்டது. இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். நான்கு வாகனங்களில் கொண்டுவரப்பட்ட தண்ணீரைக் கொண்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சுமார் 2 மணி நேரம் தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் போராடி வந்தனர். பட்டாசு கடை என்பதால் டிஎஸ்பி அர்விந்த் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர். இந்த திடீர் தீ விபத்தால் லட்சக்கணக்கான மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசமானது. இச்சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு நிலவியது.

கிருஷ்ணகிரி: ஓசூரில் பெங்களூர் செல்லும் சாலை அருகே வடிவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை 4 மணி அளவில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்தால் கடை முழுவதும் பட்டாசுகள் வெடித்து புகை மூட்டமாக காணப்பட்டது. இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். நான்கு வாகனங்களில் கொண்டுவரப்பட்ட தண்ணீரைக் கொண்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சுமார் 2 மணி நேரம் தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் போராடி வந்தனர். பட்டாசு கடை என்பதால் டிஎஸ்பி அர்விந்த் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர். இந்த திடீர் தீ விபத்தால் லட்சக்கணக்கான மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசமானது. இச்சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: காதல் கணவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.