ETV Bharat / state

8 மணி நேர போராட்டத்துக்கு பின் பிடிபட்ட குட்டி யானை!

author img

By

Published : Jan 13, 2020, 11:59 AM IST

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே சுற்றித் திரிந்த குட்டி யானையை 8 மணி நேர போராட்டத்துக்கு பின் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

8 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பிடிபட்ட யானை கன்று
8 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பிடிபட்ட யானை கன்று


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றித் திரிகின்றன. இந்த யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த 8 மாதமே ஆன பெண் குட்டிய யானை, அகரம் கிராமத்துக்குள் நுழைந்தது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் குட்டி யானையை விரட்டினர். அப்போது அந்த யானை வழி தெரியாமல் அருகில் உள்ள வயல் வெளிகளிலும் விவசாய தோட்டங்களிலும் சுற்றித் திரிந்தது.

இது குறித்து தகவலறிந்த வந்த வனத்துறையினர், குட்டி யானையை தாயுடன் சேர்க்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் அந்த யானை, வனத்துறையினரையும் பொதுமக்களையும் தாக்க தொடங்கியது. ஒரு கட்டத்தில் ஒபேபாளையம் கிராமத்தில் உள்ள கால்நடை தீவன புல் தோட்டத்துக்குள் நுழைந்தது.

ஓசூர் அருகே 8 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பிடிபட்ட யானை கன்று

இதையடுத்து, கால்நடை மருத்துவர் பிரகாஷ் குட்டி யானைக்கு சிறிய அளவிலான மயக்க ஊசி செலுத்தினார். பின்னர் மயக்க நிலைக்கு வந்த யானையை பிடித்து வாகனத்தில் ஏற்றி சானமாவு வனப்பகுதிக்கு கொண்டுச் சென்றனர்.

இதையும் படிங்க:

திருவிழா தகராறு: ஆட்சியர் முகாமை முற்றுகையிட்ட மக்கள்!


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றித் திரிகின்றன. இந்த யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த 8 மாதமே ஆன பெண் குட்டிய யானை, அகரம் கிராமத்துக்குள் நுழைந்தது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் குட்டி யானையை விரட்டினர். அப்போது அந்த யானை வழி தெரியாமல் அருகில் உள்ள வயல் வெளிகளிலும் விவசாய தோட்டங்களிலும் சுற்றித் திரிந்தது.

இது குறித்து தகவலறிந்த வந்த வனத்துறையினர், குட்டி யானையை தாயுடன் சேர்க்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் அந்த யானை, வனத்துறையினரையும் பொதுமக்களையும் தாக்க தொடங்கியது. ஒரு கட்டத்தில் ஒபேபாளையம் கிராமத்தில் உள்ள கால்நடை தீவன புல் தோட்டத்துக்குள் நுழைந்தது.

ஓசூர் அருகே 8 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பிடிபட்ட யானை கன்று

இதையடுத்து, கால்நடை மருத்துவர் பிரகாஷ் குட்டி யானைக்கு சிறிய அளவிலான மயக்க ஊசி செலுத்தினார். பின்னர் மயக்க நிலைக்கு வந்த யானையை பிடித்து வாகனத்தில் ஏற்றி சானமாவு வனப்பகுதிக்கு கொண்டுச் சென்றனர்.

இதையும் படிங்க:

திருவிழா தகராறு: ஆட்சியர் முகாமை முற்றுகையிட்ட மக்கள்!

Intro:ஓசூர் அருகே கிராம பகுதிகளில் சுற்றித் திரிந்த குட்டியானை : 8 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.Body:ஓசூர் அருகே கிராம பகுதிகளில் சுற்றித் திரிந்த குட்டியானை : 8 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றித்திரிகிறது இந்த யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த 8 மாதமே ஆன பெண் குட்டியானை ஒன்று இன்று அதிகாலை அகரம் கிராமத்துக்குள் நுழைந்தது இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் குட்டி யானையை விரட்டினர் அப்போது இந்த குட்டி யானை வழி தெரியாமல் அருகில் உள்ள வயல் வெளிகளிலும் விவசாய தோட்டங்களில் சுற்றித் திரிந்தது.

தகவலறிந்த வனத்துறையினர் இந்த குட்டி யானையை தாயுடன் சேர்க்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் இந்த குட்டி யானை வனத்துறையினரையும் பொதுமக்களின் தாக்கத் துவங்கியது ஒரு கட்டத்தில் ஒபேபாளையம் என்ற கிராமத்தில் கால்நடை தீவன புல் தோட்டத்திற்குள் குட்டி யானை புகுந்தது இதனையடுத்து இந்த குட்டி யானையும் பிடிக்க வனத்துறையினர் வலைவீசி காத்திருந்தனர் தொடர்ந்து வலைகளை வீசி காட்டு யானையை பிடிக்க முயன்றும் அது தோல்வியில் முடிந்தது


இதனையடுத்து கால்நடை மருத்துவர் பிரகாஷ் குட்டி யானைக்கு சிறிய அளவிலான மயக்க ஊசி செலுத்தினார் தொடர்ந்து இந்த காட்டு யானையை மயக்க நிலைக்கு வந்தது அதன் பின்னர் காட்டு யானையை உடலில் தண்ணீரை ஊற்றி வலைகளை விரித்து பிடித்து யானையை வாகனத்தில் ஏற்றி சானமாவு வனப்பகுதிக்கு தாயுடன் சேர்க்க கொண்டு சென்றுள்ளனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.