தருமபுரி:
அறிஞர் அண்ணாவின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி தருமபுரியில் உள்ள அண்ணாவின் சிலைக்கு தருமபுரி மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் திமுக சார்பில் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் திமுகவினர் ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகில் இருந்து மவுன ஊர்வலமாக வந்து அறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் தருமபுரி அமமுக சார்பில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் பாலு தலைமையில் அக்கட்சியினர் குமாரசாமிபேட்டை பகுதியிலிருந்து மவுன ஊர்வலமாக வந்து அறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி திமுக ஒன்றியச் செயலாளர் கோவிந்தராஜன் தலைமையில் பர்கூர் பேருந்து நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக வந்த திமுகவினர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல் கிருஷ்ணகிரி நகர திமுக செயலளார் நவாப் பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள அண்ணாவின் சிலைக்கு திமுக சட்டப்பேரவை உறுப்பினர் செங்குட்டுவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது திமுக மாவட்ட பிரதிநிதி நாகராஜ் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டு அண்ணாவுக்கு மரியாதை செலுத்தினார்கள்.
நீலகிரி:
குன்னூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்திருக்கும் அண்ணா திருஉருவச் சிலைக்கு அதிமுக நீலகிரி மாவட்ட செயலாளர் புத்திசந்திரன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் அமமுக நீலகிரி மாவட்ட கழக செயலாளர் எஸ். கலைச்செல்வன் தலைமையில் அமமுகவினரும் அண்ணாவின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: ‘பொருளாதாரம் மந்த நிலையில் இல்லை’ - இணை நிதியமைச்சர் நம்பிக்கை