ETV Bharat / state

கரூரில் பாதை தகராறு: பெண்ணைத் தாக்கிய இளைஞர் கைது

author img

By

Published : Jun 25, 2021, 10:24 AM IST

கரூரில் பாதை தகராறு காரணமாக இரும்புக்கம்பி, கற்களைக் கொண்டு பெண்ணை தாக்கிய இளைஞரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

karur news  karur latest news  crime news  karur Woman assaulted for path dispute  Woman assaulted for path dispute  karur Woman assaulted  Woman assaulted  பாதை தகராறில் பெண்ணை தாக்கிய இளைஞர் கைது  கரூர் பெண்ணை தாக்கிய இளைஞர் கைது  பாதை தகராறு  தகராறு  fight  சண்டை  அடிதடி தகராறு  குற்றச் செய்திகள்  கரூர் செய்திகள்  கரூரில் பாதை தகராறில் தாக்கப்பட்ட பெண்  பாதை தகராறு  Path dispute
பாதை தகராறில் பெண்ணை தாக்கிய இளைஞர் கைது...

கரூர்: புலியூர் அமராவதி நகரைச் சேர்ந்த கதிர்வேல்-லட்சுமி தம்பதியினர், தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்டும் கட்டுமான பணியினை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த நல்லசாமி என்பவருக்கும், கதிர்வேலுக்கும் பாதை சம்பந்தமாக தகராறு இருந்துவந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று (ஜூன் 24) நல்லசாமி (39), அவரது தாய் குஞ்சம்மாள் (70), உறவினர் சிவகாமி (47) ஆகியோர் கட்டடப் பணி நடைபெற்றுவரும் கதிர்வேல் வீட்டின் முன்பு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

கைகலப்பாக மாறிய தகராறு

ஒருகட்டத்தில் வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறி இரும்புக்கம்பி, கற்களைக் கொண்டு கதிர்வேலின் மனைவி லட்சுமியை நல்லசாமி தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் லட்சுமி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு காவல் துறையினர் நல்லசாமியை கைதுசெய்தனர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட சிவகாமி, குஞ்சம்மாள் ஆகியோரைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் வழக்கு: இன்று தீர்ப்பு!

கரூர்: புலியூர் அமராவதி நகரைச் சேர்ந்த கதிர்வேல்-லட்சுமி தம்பதியினர், தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்டும் கட்டுமான பணியினை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த நல்லசாமி என்பவருக்கும், கதிர்வேலுக்கும் பாதை சம்பந்தமாக தகராறு இருந்துவந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று (ஜூன் 24) நல்லசாமி (39), அவரது தாய் குஞ்சம்மாள் (70), உறவினர் சிவகாமி (47) ஆகியோர் கட்டடப் பணி நடைபெற்றுவரும் கதிர்வேல் வீட்டின் முன்பு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

கைகலப்பாக மாறிய தகராறு

ஒருகட்டத்தில் வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறி இரும்புக்கம்பி, கற்களைக் கொண்டு கதிர்வேலின் மனைவி லட்சுமியை நல்லசாமி தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் லட்சுமி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு காவல் துறையினர் நல்லசாமியை கைதுசெய்தனர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட சிவகாமி, குஞ்சம்மாள் ஆகியோரைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் வழக்கு: இன்று தீர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.