ETV Bharat / state

'ஜெயலலிதா ஆட்சியில் தான் கூட்டுறவுத்துறை புத்துயிர் பெற்றது' - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்! - 66th All India Cooperative Week in karur

கரூர்: கூட்டுறவுத்துறையின் சார்பில் நடைபெற்ற 66ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பங்கேற்றார்.

DMK
author img

By

Published : Nov 17, 2019, 7:35 AM IST

கரூர் மாவட்டம் கூட்டுறவுத்துறையின் சார்பில் 2019ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான 66ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தனியார் கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பெருந்தலைவர் காளியப்பன், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணைய இயக்குநர் செல்வி, பல்வேறு கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவின், சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பங்கேற்றார். கூட்டுறவு வாரவிழா தொடர்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும், சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு நிறுவனங்களைப் பாராட்டியும் கோப்பைகள் வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் உரை

அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தான், கூட்டுறவுத் துறை புத்துயிர் பெற்றது. வங்கித் துறை தொழில் துறையைச் சார்ந்தவர்களுக்கும், பெரும் முதலாளிகள் மட்டுமே பயனடையும் வகையில் செயல்பட்ட வேளையில், கிராமபுறப் பொருளாதாரமும் ஏழை, எளிய விவசாயிகளும் பயன்பெறும் வகையில் செயல்படும் ஒரே துறை கூட்டுறவுத் துறை என்பதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்' எனக் கூறினார்.

மேலும் கரூர் மாவட்டத்தில் மட்டும் 50 விழுக்காடு மானியத்துடன் 94 டிராக்டர்கள் வாங்க கடனுதவி செய்யப்பட்டுள்ளது என அவர் பெருமிதம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரூரில் இயற்கை உரம் தயாரிப்பு - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலோசனை

கரூர் மாவட்டம் கூட்டுறவுத்துறையின் சார்பில் 2019ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான 66ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தனியார் கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பெருந்தலைவர் காளியப்பன், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணைய இயக்குநர் செல்வி, பல்வேறு கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவின், சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பங்கேற்றார். கூட்டுறவு வாரவிழா தொடர்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும், சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு நிறுவனங்களைப் பாராட்டியும் கோப்பைகள் வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் உரை

அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தான், கூட்டுறவுத் துறை புத்துயிர் பெற்றது. வங்கித் துறை தொழில் துறையைச் சார்ந்தவர்களுக்கும், பெரும் முதலாளிகள் மட்டுமே பயனடையும் வகையில் செயல்பட்ட வேளையில், கிராமபுறப் பொருளாதாரமும் ஏழை, எளிய விவசாயிகளும் பயன்பெறும் வகையில் செயல்படும் ஒரே துறை கூட்டுறவுத் துறை என்பதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்' எனக் கூறினார்.

மேலும் கரூர் மாவட்டத்தில் மட்டும் 50 விழுக்காடு மானியத்துடன் 94 டிராக்டர்கள் வாங்க கடனுதவி செய்யப்பட்டுள்ளது என அவர் பெருமிதம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரூரில் இயற்கை உரம் தயாரிப்பு - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலோசனை

Intro:கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய விவசாயிகளின் வாழ்கை முன்னேற்றத்திற்கு காரணமாக இருப்பது கூட்டுறவு துறை- தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்
Body:கரூரில் நடைபெற்ற 66-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம்.

கரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் 66-வது கூட்டுறவு வார விழா 2019-க்கான மாவட்ட அளவிளான விழா மாவட்ட வருவாய் அலுவலவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பெருந்தலைவர் காளியப்பன் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ.கீதா தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணைய இயக்குனர் செல்வி பல்வேறு கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்ட விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூட்டுறவு வாராவிழா தொடர்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு நிறுவனங்களை பாராட்டி கோப்பைகள் வழங்கியும் சிறப்புரை நிகழ்த்தினார்.

அப்போது உலக பத்திரிக்கையாளர்கள் தினாமான இன்று பல்வேறு சிரமங்களுக்கிடையே உலகெங்கும் நடக்கும் நிகழ்வுகளை நடுநிலையோடு செய்தியாக அளிக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்றார். தொடர்ந்து பேசும் போது மறைந்த தமிழக முதலமைசர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தான் கூட்டுறவு துறை புத்துயிர் பெற்றது.தேசிய மற்றும் தனியார் வங்கிகள் தொழில் துறையில் பங்காற்றுவர்களுக்கும்பெரும் முதலாளிகள் மட்டுமே பயனடையும் வகையில் வங்கி துறை செயல்படும் வேளையில் கிராம புற பொருளாதாரமும் ஏழை எளிய விவசாயிகளும் பயன் பெறும் வகையில் இன்று செயல்படும் ஒரே துறை கூட்டுறவு துறை என்பதை அணைவரும் எண்ணி பார்க்க வேண்டும் என்றார்.மேலும் இதுவரை இல்லாத வகையில் கரூர் மாவட்டத்தில் மட்டும் 50-சதவிகித மானியத்துடன் 94- டிராக்டர்கள் வாங்க கடனுதவி செய்யப்பட்டுள்ளது என்றார்Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.