ETV Bharat / state

கரூரில் கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது

author img

By

Published : Jun 24, 2021, 10:33 AM IST

கரூர்: புஞ்சை தோட்டக்குறிச்சியில் சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி விற்பனைசெய்த மூன்று பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

கைது
கைது

கரூர் புஞ்சை தோட்டக்குறிச்சி அருகே உள்ள மேல்ஒரத்தையில் கஞ்சா விற்பனை நடைபெற்றுவருவதாக வேலாயுதம்பாளையம் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அத்தகவலின்பேரில் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி தலைமையிலான காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ரூபன்குமார் (24) என்பவரது வீட்டைச் சோதனையிட்டதில், ஒரு கிலோ அளவுக்கு கஞ்சா பதுக்கிவைத்து, விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.

மேலும் இதில் அவருக்கு உதவியாகக் கரூர் பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் (26), உப்பிடமங்கலம் ஜோதிடம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (28) ஆகியோர் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சா கடந்திய மூன்று பேரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மாணவிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலின் தாக்குதல் காணொலி வைரல்

கரூர் புஞ்சை தோட்டக்குறிச்சி அருகே உள்ள மேல்ஒரத்தையில் கஞ்சா விற்பனை நடைபெற்றுவருவதாக வேலாயுதம்பாளையம் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அத்தகவலின்பேரில் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி தலைமையிலான காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ரூபன்குமார் (24) என்பவரது வீட்டைச் சோதனையிட்டதில், ஒரு கிலோ அளவுக்கு கஞ்சா பதுக்கிவைத்து, விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.

மேலும் இதில் அவருக்கு உதவியாகக் கரூர் பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் (26), உப்பிடமங்கலம் ஜோதிடம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (28) ஆகியோர் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சா கடந்திய மூன்று பேரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மாணவிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலின் தாக்குதல் காணொலி வைரல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.