ETV Bharat / state

கரூரில் மேலும் மூன்று பேருக்கு கரோனா!

author img

By

Published : May 7, 2020, 4:43 PM IST

கரூர்: மாவட்டத்தில் புதிதாக மூன்று நபர்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கரூரில் மூன்று பேருக்கு கரோனா
கரூரில் மூன்று பேருக்கு கரோனா

கரூர் மாவட்டம் தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆர்.டி.மலையைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று இரவு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸில் அவர் அழைத்துச் செல்லப்பட்டு, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க நபர், 25 மதிக்கத்தக்க நபர் என இரண்டு பேர் மகாராஷ்டிராவில் இருந்து கரூர் திரும்பியுள்ளனர். இவர்கள் இருவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில், கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரூர் மாவட்டம் தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆர்.டி.மலையைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று இரவு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸில் அவர் அழைத்துச் செல்லப்பட்டு, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க நபர், 25 மதிக்கத்தக்க நபர் என இரண்டு பேர் மகாராஷ்டிராவில் இருந்து கரூர் திரும்பியுள்ளனர். இவர்கள் இருவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில், கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: கரோனா தொற்றால் பெண்மணி ஒருவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.