ETV Bharat / state

கரோனா எதிராொலி: எளிமையாக நடந்த திருமணம் - 15 பேர் மட்டுமே கலந்துகொண்ட திருமண நிகழ்வு

கரூர்: 144 தடை உத்தரவை மதித்து கிருஷ்ணராயபுரத்தில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

marriage
marriage
author img

By

Published : Mar 28, 2020, 9:11 PM IST

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்தவர் உமேஸ்வரன். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். உப்பிடமங்கலம் கீழ்பாகம் சாலைப்பட்டியைச் சேர்ந்தவர் திவ்யா. இவர்கள் இருவரின் திருமணம் இன்று மணவாசியை அடுத்த கோரகுத்தி கிராமத்தில் அமைந்துள்ள பெருமாள் கோயிலில் நடைபெற்றது. ஏற்கனவே, தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கரோனா பாதுகாப்பு காரணமாக உமேஸ்வரன் - திவ்யா ஆகியோரின் திருமணத்தில் கூட்டம் அதிகம் இல்லாமல் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் வெறும் 12 பேர் மட்டுமே கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்தின்போது மணமக்கள் மற்றும் பொதுமக்களும் முகக் கவசம் அணிந்திருந்தனர்.

இது குறித்து புது மாப்பிள்ளை உமேஸ்வரன் கூறுகையில், திருமண நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் முகக் கவசம் அணிந்து இருக்கிறோம். எனது திருமணம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது என்பதால், அரசு விதித்த விதி முறையின்படி நடைபெற்று மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

எளிமையாக நடந்த திருமணம்

வழக்கறிஞராக பணியாற்றி வரும் தான் சட்டத்தை மதித்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டுமென 15 பேருக்கும் குறைவான நபர்களுடன் தனது திருமணத்தை நடத்தினேன் என்றார்.

இதையும் படிங்க: காலில் விழுந்து கேட்கிறோம்ய.! வீட்டைவிட்டு வெளியே வராதீங்க.! விழுதுகள் இளைஞர்களின் விழிப்புணர்வு

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்தவர் உமேஸ்வரன். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். உப்பிடமங்கலம் கீழ்பாகம் சாலைப்பட்டியைச் சேர்ந்தவர் திவ்யா. இவர்கள் இருவரின் திருமணம் இன்று மணவாசியை அடுத்த கோரகுத்தி கிராமத்தில் அமைந்துள்ள பெருமாள் கோயிலில் நடைபெற்றது. ஏற்கனவே, தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கரோனா பாதுகாப்பு காரணமாக உமேஸ்வரன் - திவ்யா ஆகியோரின் திருமணத்தில் கூட்டம் அதிகம் இல்லாமல் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் வெறும் 12 பேர் மட்டுமே கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்தின்போது மணமக்கள் மற்றும் பொதுமக்களும் முகக் கவசம் அணிந்திருந்தனர்.

இது குறித்து புது மாப்பிள்ளை உமேஸ்வரன் கூறுகையில், திருமண நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் முகக் கவசம் அணிந்து இருக்கிறோம். எனது திருமணம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது என்பதால், அரசு விதித்த விதி முறையின்படி நடைபெற்று மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

எளிமையாக நடந்த திருமணம்

வழக்கறிஞராக பணியாற்றி வரும் தான் சட்டத்தை மதித்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டுமென 15 பேருக்கும் குறைவான நபர்களுடன் தனது திருமணத்தை நடத்தினேன் என்றார்.

இதையும் படிங்க: காலில் விழுந்து கேட்கிறோம்ய.! வீட்டைவிட்டு வெளியே வராதீங்க.! விழுதுகள் இளைஞர்களின் விழிப்புணர்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.