ETV Bharat / state

கட்டுப்பாடுகளுக்கு திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும்: கரூர் திருக்குறள் பேரவை செயலர்

author img

By

Published : Apr 10, 2021, 9:34 AM IST

கரூர்: கட்டுப்பாடுகளுடன் திருவிழாக்கள் நடைபெறுவதற்கு அனுமதிக்க வேண்டும் என கரூர் திருக்குறள் பேரவை செயலர் மேலை பழனியப்பன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ட்ஃப்ச
ட்ஃபச்

கரூர் மாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் மே மாதம் தொடங்கி 30 நாட்களுக்கு கொண்டாடப்படுவது வழக்கம். இதில் கரூர் மாவட்டம் மட்டுட்மின்றி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கானோர் பங்கேற்பர்.

இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக இன்று (ஏப்ரல் 10 ) முதல் திருவிழாக்கள் நடத்த தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈடிவி பாரத்திற்கு கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் பிரத்யோக பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, ” கரோனா பரவல் காரணமாக திருவிழாக்களுக்கு தமிழக அரசு தடை விதித்திருப்பது ஆன்மீகப் பெருமக்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த வேதனை அளிக்கக்கூடியது.

ஆலயங்களில் நடைபெறும் திருவிழாக்கள் மக்களின் குறைகளை இறக்கி வைக்கக்கூடிய இடமாகும். மேலும் உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்கு நல்ல ஒரு வாய்ப்பாகவும் அமையும். திருவிழாக்கள் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நிகழ்வாகும். மனக்குறைகளை தெய்வம் போக்க்கும் என நம்பி, பக்தர்கள் தீச்சட்டி ஏந்துதல், அலகு குத்துதல், தலை முடி காணிக்கை என நேர்த்திக் கடனை செய்து வருகின்றனர்.

ஈடிவி பாரத்துக்கு அளித்த பேட்டி

அரசு நடத்தும் மதுபான கடைகளில் தகுந்த இடைவெளியின்றி நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடும் இடமாக உள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் தடை செய்யாத அரசு, திருவிழாக்களை தடை செய்வது வேதனை அளிக்கக்கூடியது.

அண்மையில் திருவிழாக்கள், குடமுழுக்கு விழாக்கள் நடத்த அரசு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தது. திருவிழாக்களை நிறுத்துவதன் மூலம் மக்களுக்கு மனச்சுமை அதிகரிக்கும்.

எனவே தமிழகம் முழுவதும் திருவிழாக்கள் கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதிக்க வேண்டும். குறிப்பாக கரூர் மாவட்டத்தில் வைகாசி பெருவிழா நடத்த புதிய விதிமுறைகளை வகுத்து அனுமதிக்க வேண்டும். உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்து அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்திட அனுமதி அளிக்க வேண்டும்.

இதன்மூலம் மக்கள் நிம்மதியாகவும் அமைதியாகவும் இறை வழிபாட்டை நடத்த, வாய்ப்பாக அமையும் என தமிழக அரசுக்கு வேண்டுகோளாக திருக்குறள் பேரவை முன்வைக்கிறது” என்றார்.

கரூர் மாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் மே மாதம் தொடங்கி 30 நாட்களுக்கு கொண்டாடப்படுவது வழக்கம். இதில் கரூர் மாவட்டம் மட்டுட்மின்றி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கானோர் பங்கேற்பர்.

இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக இன்று (ஏப்ரல் 10 ) முதல் திருவிழாக்கள் நடத்த தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈடிவி பாரத்திற்கு கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் பிரத்யோக பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, ” கரோனா பரவல் காரணமாக திருவிழாக்களுக்கு தமிழக அரசு தடை விதித்திருப்பது ஆன்மீகப் பெருமக்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த வேதனை அளிக்கக்கூடியது.

ஆலயங்களில் நடைபெறும் திருவிழாக்கள் மக்களின் குறைகளை இறக்கி வைக்கக்கூடிய இடமாகும். மேலும் உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்கு நல்ல ஒரு வாய்ப்பாகவும் அமையும். திருவிழாக்கள் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நிகழ்வாகும். மனக்குறைகளை தெய்வம் போக்க்கும் என நம்பி, பக்தர்கள் தீச்சட்டி ஏந்துதல், அலகு குத்துதல், தலை முடி காணிக்கை என நேர்த்திக் கடனை செய்து வருகின்றனர்.

ஈடிவி பாரத்துக்கு அளித்த பேட்டி

அரசு நடத்தும் மதுபான கடைகளில் தகுந்த இடைவெளியின்றி நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடும் இடமாக உள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் தடை செய்யாத அரசு, திருவிழாக்களை தடை செய்வது வேதனை அளிக்கக்கூடியது.

அண்மையில் திருவிழாக்கள், குடமுழுக்கு விழாக்கள் நடத்த அரசு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தது. திருவிழாக்களை நிறுத்துவதன் மூலம் மக்களுக்கு மனச்சுமை அதிகரிக்கும்.

எனவே தமிழகம் முழுவதும் திருவிழாக்கள் கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதிக்க வேண்டும். குறிப்பாக கரூர் மாவட்டத்தில் வைகாசி பெருவிழா நடத்த புதிய விதிமுறைகளை வகுத்து அனுமதிக்க வேண்டும். உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்து அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்திட அனுமதி அளிக்க வேண்டும்.

இதன்மூலம் மக்கள் நிம்மதியாகவும் அமைதியாகவும் இறை வழிபாட்டை நடத்த, வாய்ப்பாக அமையும் என தமிழக அரசுக்கு வேண்டுகோளாக திருக்குறள் பேரவை முன்வைக்கிறது” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.