ETV Bharat / state

‘குடிநீர் பஞ்சமே இனி இருக்காது’ - எம்.ஆர். விஜயபாஸ்கர்

கரூர்: மண்மங்கலம் பகுதிகளில் இனி குடிநீர் பஞ்சமே இருக்காது என தமிழ்நாடு போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உறுதியளித்துள்ளார்.

author img

By

Published : Sep 3, 2019, 10:10 PM IST

எம். ஆர். விஜயபாஸ்கர்

தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் கரூரில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மண்மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மண்மங்கலம், மின்னாம்பள்ளி, பஞ்சமாதேவி, வாங்கல் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து குறைகளைக் கேட்கும் கூட்டம், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கரூர் மாவட்ட திட்ட அலுவலர், வருவாய் வட்டாட்சியர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

எம்.ஆர். விஜயபாஸ்கர்

பொதுமக்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், ”இதற்கு முன்னதாக மண்மங்கலம் ஊராட்சியில் சீரான குடிநீர் கிடைப்பதற்கு சிறிது சிக்கல் இருந்தது. அதனை சரிசெய்யும் வகையில் குடிநீரை சேமிக்கும் தொட்டி கட்டப்பட்டு மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. இதேபோல், நடவடிக்கை எடுத்து உங்களது கிராமத்திலும் குடிநீர் பஞ்சம் தீர வழிவகை செய்யப்படும்” என்றார்.

பின்னர், கரூரையடுத்த தண்ணீர்பந்தல் பாளையம் பகுதியில் உள்ள தேவையற்ற சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் கரூரில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மண்மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மண்மங்கலம், மின்னாம்பள்ளி, பஞ்சமாதேவி, வாங்கல் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து குறைகளைக் கேட்கும் கூட்டம், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கரூர் மாவட்ட திட்ட அலுவலர், வருவாய் வட்டாட்சியர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

எம்.ஆர். விஜயபாஸ்கர்

பொதுமக்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், ”இதற்கு முன்னதாக மண்மங்கலம் ஊராட்சியில் சீரான குடிநீர் கிடைப்பதற்கு சிறிது சிக்கல் இருந்தது. அதனை சரிசெய்யும் வகையில் குடிநீரை சேமிக்கும் தொட்டி கட்டப்பட்டு மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. இதேபோல், நடவடிக்கை எடுத்து உங்களது கிராமத்திலும் குடிநீர் பஞ்சம் தீர வழிவகை செய்யப்படும்” என்றார்.

பின்னர், கரூரையடுத்த தண்ணீர்பந்தல் பாளையம் பகுதியில் உள்ள தேவையற்ற சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

Intro:கரூர் மன்மங்கலம் பகுதிகளில் இனி தண்ணீர் பஞ்சமே இருக்காது தமிழக போக்குவரத்துறை அமைச்சர் உறுதி


Body: தமிழக முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின்கீழ் கரூர் மாவட்டத்தில் மண்மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உட்பட்ட மண்மங்கலம் மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி வாங்கல் போன்ற பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து குறைகளை மக்களாக பெரும் நிகழ்ச்சி தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

இதில் கரூர் மாவட்ட திட்ட அலுவலர் கவிதா மேலும் வருவாய் வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் பொதுமக்களிடம் கூறுகையில் இதற்கு முன்னதாக கரூர் மாவட்டத்தில் குறிப்பாக மண்மங்கலம் ஊராட்சியில் சீரான குடிநீர் கிடைப்பதற்கு சிரிது சிக்கல் இருந்தது அதனை சரிசெய்யும் வகையில் தண்ணீர் சேமிக்கும் தொட்டி கட்டப்பட்டு அதனை சரியான பிரிவுகளாக பிரித்து வழங்கப்பட்டு வருகிறது இது போன்றவற்றால் தண்ணீர் பஞ்சம் சீரான முறையில் வரும் என்றார்.

பின்பு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று விட்டு கரூரை அடுத்த தண்ணீர்பந்தல் பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு வழியில்லாத வகையில் அமைந்திருக்கும் சீமை கருவேல மரங்கள் மற்றும் மண்கள் எடுத்து தூர்வாரும் பணியை தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார் இதன் மதிப்பு 1.84 லட்சம் ஆகும்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.