கரூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட ஒரு லட்சம் குடும்பங்களுக்கு, பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ வெல்லம், 200 கிராம் பாசிப்பருப்பு, 200 மில்லி ஆவின் நெய், 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகிய பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை கோடங்கிபட்டி பகுதியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கி தொடங்கிவைத்தார்.
முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூ.2500 வழங்கப்படும் என்று தெரிவித்தார். அதன்படி, பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 வழங்கப்படுகிறது. மேலும் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
![Pongal Cash With Gift Bag Cash With Gift Bag package Pongal Karur assembly Karur latest news Karur district news பொங்கல் பரிசுத் தொகுப்பு கரூர் பொங்கல் பண்டிகை கரூர் மாவட்ட செய்திகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-krr-02-minister-pongal-gift-vis-scr-7205677_08012021203445_0801f_1610118285_229.jpg)
கடந்த ஆண்டு துண்டு கரும்பு வழங்கப்பட்ட நிலையில் இந்தாண்டு கூடுதலாக ஒரு முழு நீளக் கரும்பு வழங்கப்பட்டுவருகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வீடு வீடாகச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற டோக்கன் விநியோகம்!