ETV Bharat / state

கரூரில் கார் விபத்தில் புதுமணத் தம்பதி உயிரிழப்பு

author img

By

Published : Sep 24, 2020, 2:34 PM IST

கரூர்: சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் புதுமணத் தம்பதியினர் உயிரிழந்தனர்.

புதுமண தம்பதி உயிரிழப்பு
புதுமண தம்பதி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் (26), மகாலட்சுமி (20) தம்பதி சொந்த வேலை காரணமாக காரில் கரூர் வந்துகொண்டிருந்தனர்.

அப்போது காரானது சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது தனியார் பொறியியல் கல்லூரி அறிவிப்புப் பலகை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் புதுமணத் தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலாயுதம்பாளையம் காவல் துறையினர் இருவரின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு - உறவினர்கள் கதறல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் (26), மகாலட்சுமி (20) தம்பதி சொந்த வேலை காரணமாக காரில் கரூர் வந்துகொண்டிருந்தனர்.

அப்போது காரானது சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது தனியார் பொறியியல் கல்லூரி அறிவிப்புப் பலகை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் புதுமணத் தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலாயுதம்பாளையம் காவல் துறையினர் இருவரின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு - உறவினர்கள் கதறல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.