ETV Bharat / state

கரூரில் புதிதாகக் கூடுதல் மகிளா நீதிமன்றம் திறப்பு!

author img

By

Published : Jan 4, 2020, 11:19 PM IST

கரூர்: ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மகிளா நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜா, சரவணன் ஆகியோர் திறந்துவைத்தனர்.

mahila court
mahila court

கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே விரைவு மகிளா நீதிமன்றம் செயல்பட்டு வருகின்றது. தற்போது புதிதாக கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மகிளா நீதிமன்றத்தினை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜா சி.சரவணன் இன்று திறந்துவைத்துப் பார்வையிட்டு முதல் வழக்கு விசாரணையை தொடங்கி வைத்தனர்.

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான 250 வழக்குகள் கரூர் நீதித்துறை நடுவர் எண்.1 மற்றும் எண்.2 ஆகிய நீதிமன்றங்களிலிருந்து மாற்றப்படவுள்ளது. இந்த கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் மூன்று ஆண்டுகளுக்குள்ளான தண்டனை விதிக்கப்படக்கூடிய வகையிலான வழக்குகள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

கரூரில் மகிளா நீதிமன்றம் திறப்பு

கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள விரைவு மகிளா நீதிமன்றத்தில் ஏழு வருடங்களுக்கு மேல் தண்டனை வழங்கக்கூடிய வகையிலான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் சிற்றுண்டி உணவகத்தையும் நீதியரசர்கள் திறந்து வைத்தனர்.

இதையும் படிங்க: கொடைக்கானலில் உடற்பயிற்சி கூடத்தை பராமரிக்க கோரிக்கை !

கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே விரைவு மகிளா நீதிமன்றம் செயல்பட்டு வருகின்றது. தற்போது புதிதாக கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மகிளா நீதிமன்றத்தினை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜா சி.சரவணன் இன்று திறந்துவைத்துப் பார்வையிட்டு முதல் வழக்கு விசாரணையை தொடங்கி வைத்தனர்.

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான 250 வழக்குகள் கரூர் நீதித்துறை நடுவர் எண்.1 மற்றும் எண்.2 ஆகிய நீதிமன்றங்களிலிருந்து மாற்றப்படவுள்ளது. இந்த கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் மூன்று ஆண்டுகளுக்குள்ளான தண்டனை விதிக்கப்படக்கூடிய வகையிலான வழக்குகள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

கரூரில் மகிளா நீதிமன்றம் திறப்பு

கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள விரைவு மகிளா நீதிமன்றத்தில் ஏழு வருடங்களுக்கு மேல் தண்டனை வழங்கக்கூடிய வகையிலான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் சிற்றுண்டி உணவகத்தையும் நீதியரசர்கள் திறந்து வைத்தனர்.

இதையும் படிங்க: கொடைக்கானலில் உடற்பயிற்சி கூடத்தை பராமரிக்க கோரிக்கை !

Intro:கூடுதல் மகளிர் நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராஜா மற்றும் சரவணன் திறந்து வைப்புBody:கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மகிளா நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜா மற்றும் சரவணன் இருவரும் இணைந்து திறந்துவைத்தனர்.

கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே விரைவு மகிளா நீதிமன்றம் செயல்பட்டு வருகின்றது. தற்போது புதிதாக கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மகிளா நீதிமன்றத்தினை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜா சி.சரவணன் இன்று திறந்துவைத்துப் பார்வையிட்டு முதல் வழக்கு விசாரணையை துவக்கி வைத்தனர்.

புதிதாக துவங்கப்பட்டுள்ள கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான 250 வழக்குகள் கரூர் நீதித்துறை நடுவர் எண்.1 மற்றும் எண்.2 ஆகிய நீதிமன்றங்களில் இருந்து மாற்றப்படவுள்ளது.
இந்த கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் 3 ஆண்டுகளுக்குள்ளான தண்டனை விதிக்கப்படக்கூடிய வகையிலான வழக்குகள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

கரூர் மாவட்டத்;தில் ஏற்கனவே உள்ள விரைவு மகிளா நீதிமன்றத்தில் 7 வருடங்களுக்கு மேல் தண்டனை வழங்கக்கூடிய வகையிலான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத்தொடர்;ந்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் சிற்றுண்டி உணவகத்தையும் ராஜா மற்றும் சரவணன் நீதியரசர்கள் திறந்துவைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட நீதிபதி .எம்.கிறிஸ்டோபர் தலைமை குற்றவியல் நடுவர் திரு.பி.சி.கோபிநாத் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சி.ராஜேந்திரன் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி திருமதி.சசிகலா குடும்பநல நீதிபதி திருமதி.பிருந்தா கேசவாச்சாரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பாண்டியராஜன் மற்றும் கரூர் குளித்தலை அரவக்குறிச்சி நீதிபதிகள் வழக்கறிஞர்கள் சங்கங்களின் தலைவர்கள் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.