கரூர் மாவட்டம் கருநெல்லி வலசு பகுதியைச் சேர்ந்தவர் நல்லசிவம் (60). இவரது தாய் ஆட்சியாத்தாள் (78). இருவரும் டி.நல்லிபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
அப்போது கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில், கோவையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த கார், இவர்களது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் ஆட்சியாத்தாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நல்லசிவம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கட்டப்பட்டுவந்த மேம்பாலம் இடிந்து விழுந்து 3 பேர் படுகாயம்