ETV Bharat / state

2,000 பெண்கள் தாலிக்குத் தங்கம் வழங்கிய எம்.ஆர். விஜயபாஸ்கர்! - பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவி

கரூர்: திருமண உதவித் திட்டத்தின் கீழ் 2,000 பெண்களுக்கு  தாலிக்குத்  தங்கத்தைப்  போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார்.

minister
author img

By

Published : Oct 25, 2019, 11:28 PM IST

கரூர் மாவட்டத்தில் சமூக நல, சட்டத்துறையின் சார்பில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவி, தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி அட்லஸ் கலையரங்கம் பகுதியில் நடைபெற்றது. இதில் 2 ஆயிரம் பெண்களுக்கு 12.92 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், பெண்கள் வாழ்க்கைத் தரமும் உயர வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்குத் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் மூலம் பொதுமக்கள் நல்லமுறையில் பயன்பெற வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

2,000 பெண்கள் தாலிக்குத் தங்கம்

இதில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாவட்ட கண்காணிப்பாளர் பாண்டியராஜன், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா, சமூக நல அலுவலர் ரவி பாலா எனப் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'மருத்துவர்கள் பணி புறக்கணிப்புப் போராட்டத்தை தவிர்க்க வேண்டும்!'

கரூர் மாவட்டத்தில் சமூக நல, சட்டத்துறையின் சார்பில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவி, தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி அட்லஸ் கலையரங்கம் பகுதியில் நடைபெற்றது. இதில் 2 ஆயிரம் பெண்களுக்கு 12.92 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், பெண்கள் வாழ்க்கைத் தரமும் உயர வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்குத் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் மூலம் பொதுமக்கள் நல்லமுறையில் பயன்பெற வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

2,000 பெண்கள் தாலிக்குத் தங்கம்

இதில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாவட்ட கண்காணிப்பாளர் பாண்டியராஜன், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா, சமூக நல அலுவலர் ரவி பாலா எனப் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'மருத்துவர்கள் பணி புறக்கணிப்புப் போராட்டத்தை தவிர்க்க வேண்டும்!'

Intro:2000 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி தமிழக போக்குவரத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.


Body:கரூர் மாவட்ட சமூக நல மற்றும் சட்டத்துறையின் மூலம் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவி மற்றும் திருமணத்திற்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கரூரை அடுத்த அட்லஸ் கலையரங்கம் பகுதியில் நடைபெற்றது இரண்டாயிரம் ஏழைப் பெண்களுக்கு 12.92 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

பெண்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற உன்னத நோக்கில் பெண்கள் வாழ்க்கை தரமும் உயர வேண்டும் அனைவரும் கல்வி கற்கும் முன்வர வேண்டும் என்ற சிறப்பான எண்ணத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினார் மேலும் இந்திய துணை கண்டத்தில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் இந்த திட்டமானது பொதுமக்கள் நல்ல முறையில் பயன் பெற வேண்டும் என தமிழக போக்குவரத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

என்னை நிகழ்ச்சிகள் கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் பாண்டியராஜன் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா கரூர் வட்டாட்சியர் சந்தியா மாவட்ட சமூக நல அலுவலர் ரவி பாலா அரசு அலுவலர்கள் மற்றும் அதிமுக கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.