ETV Bharat / state

மின்வாரிய ஊழியர் அடித்துக் கொலை

author img

By

Published : Dec 18, 2021, 12:36 PM IST

குளித்தலை அருகே சொந்தத் தகராறில் மின் வாரிய ஊழியர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குளித்தலை காவல் நிலையம்
குளித்தலை காவல் நிலையம்

கரூர்: குளித்தலை அருகே அய்யர்மலை பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கவாசகம் (42). இவர் மிளகுப்பாறையில் அமைந்திருக்கும் மின்வாரிய அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்துவந்தார். மாணிக்கவாசகம் வசித்துவரும் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், அவரது மனைவி அன்னக்கிளி, அவர்களது மகன் கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் கழிவுநீர் வடிகால் தொடர்பாக அடிக்கடி தகராறு நடந்துள்ளது.

இந்நிலையில், மாணிக்கவாசகம் தனது வீட்டில் உள்ள குடிநீர்த் தொட்டியை தூய்மைப்படுத்துவதற்காக நீரை வெளியேற்றியுள்ளார். இதனால் கோபாலகிருஷ்ணன் மாணிக்கவாசகத்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

கொலையில் முடிந்த தகராறு

அச்சமயத்தில், அன்னக்கிளி, அவரது மகன் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மாணிக்கவாசகத்தை கல்லால் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த மாணிக்கவாசகத்தை குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து பின்னர், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைப் பலனின்றி மாணிக்கவாசகம் உயிரிழந்தார்.

இச்சம்பவம் பற்றி மாணிக்கவாசகத்தின் மனைவி ஜெயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் குளித்தலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணனை கைதுசெய்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள அன்னக்கிளியை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: 6 மாத குழந்தை நரபலி? - தஞ்சையில் திடுக்கிடும் சம்பவம்

கரூர்: குளித்தலை அருகே அய்யர்மலை பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கவாசகம் (42). இவர் மிளகுப்பாறையில் அமைந்திருக்கும் மின்வாரிய அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்துவந்தார். மாணிக்கவாசகம் வசித்துவரும் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், அவரது மனைவி அன்னக்கிளி, அவர்களது மகன் கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் கழிவுநீர் வடிகால் தொடர்பாக அடிக்கடி தகராறு நடந்துள்ளது.

இந்நிலையில், மாணிக்கவாசகம் தனது வீட்டில் உள்ள குடிநீர்த் தொட்டியை தூய்மைப்படுத்துவதற்காக நீரை வெளியேற்றியுள்ளார். இதனால் கோபாலகிருஷ்ணன் மாணிக்கவாசகத்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

கொலையில் முடிந்த தகராறு

அச்சமயத்தில், அன்னக்கிளி, அவரது மகன் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மாணிக்கவாசகத்தை கல்லால் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த மாணிக்கவாசகத்தை குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து பின்னர், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைப் பலனின்றி மாணிக்கவாசகம் உயிரிழந்தார்.

இச்சம்பவம் பற்றி மாணிக்கவாசகத்தின் மனைவி ஜெயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் குளித்தலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணனை கைதுசெய்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள அன்னக்கிளியை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: 6 மாத குழந்தை நரபலி? - தஞ்சையில் திடுக்கிடும் சம்பவம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.