ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகள் 100% வாக்களிக்க வரையப்பட்ட விழிப்புணர்வு!

author img

By

Published : Mar 10, 2021, 3:21 PM IST

கரூர்: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் 100 விழுக்காடு வாக்களிக்க வலியுறுத்தி வரையப்பட்ட விழிப்புணர்வு நடைபெற்றது. அதில் ரங்கோலி கோலங்களை கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி பார்வையிட்டார்.

கரூர் மாவட்ட செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் 100 விழுக்காடு வாக்களிக்க வரையப்பட்ட விழிப்புணர்வு

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் 100 விழுக்காடு வாக்களிக்க வலியுறுத்தி, வரையப்பட்ட விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் ரங்கோலி கோலங்களை கரூர் மாவட்டத் தேர்தல் அலுவலர் மலர்விழி பார்வையிட்டார்.

பின்னர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விழிப்புணர்வு வாகனத்தில் கையொப்பமிட்டு வாகன பரப்புரையைத் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் பொதுத்தேர்தலில் 100 விழுக்காடு வாக்களிக்கும் துண்டறிக்கைகளை வழங்கி, உறுதிமொழியை மாவட்டத் தேர்தல் அலுவலர் மலர்விழி வாசிக்க, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

அப்பொழுது நிகழ்ச்சியில் பேசிய மலர்விழி, “கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், சுமார் 4,131 முதியவர்கள் உள்பட மொத்தம் 6,937 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர் எனக் கணக்கிடப்பட்டு, அவர்களுக்குத் தேவையான சிறப்பு வசதிகளை வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் முதல் முறையாக இந்தத் தேர்தலில், சிறப்பம்சமாக மாற்றுத்திறனாளிகள், 80 வயதைக் கடந்த முதியவர்கள் அஞ்சல் வாக்களிக்கும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது” என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், தேசிய நெடுஞ்சாலைகளுக்கான நிலம் எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மகளிர் திட்ட இணை இயக்குனர் வாணிஈஸ்வரி, கரூர் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பிரபாகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கட்டாயமாக வாக்களிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் 100 விழுக்காடு வாக்களிக்க வலியுறுத்தி, வரையப்பட்ட விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் ரங்கோலி கோலங்களை கரூர் மாவட்டத் தேர்தல் அலுவலர் மலர்விழி பார்வையிட்டார்.

பின்னர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விழிப்புணர்வு வாகனத்தில் கையொப்பமிட்டு வாகன பரப்புரையைத் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் பொதுத்தேர்தலில் 100 விழுக்காடு வாக்களிக்கும் துண்டறிக்கைகளை வழங்கி, உறுதிமொழியை மாவட்டத் தேர்தல் அலுவலர் மலர்விழி வாசிக்க, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

அப்பொழுது நிகழ்ச்சியில் பேசிய மலர்விழி, “கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், சுமார் 4,131 முதியவர்கள் உள்பட மொத்தம் 6,937 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர் எனக் கணக்கிடப்பட்டு, அவர்களுக்குத் தேவையான சிறப்பு வசதிகளை வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் முதல் முறையாக இந்தத் தேர்தலில், சிறப்பம்சமாக மாற்றுத்திறனாளிகள், 80 வயதைக் கடந்த முதியவர்கள் அஞ்சல் வாக்களிக்கும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது” என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், தேசிய நெடுஞ்சாலைகளுக்கான நிலம் எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மகளிர் திட்ட இணை இயக்குனர் வாணிஈஸ்வரி, கரூர் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பிரபாகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கட்டாயமாக வாக்களிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.