ETV Bharat / state

கரூர் மாவட்ட புதிய ஆட்சியராக பிரபுசங்கர் நியமனம்

கரூர்: மாவட்ட ஆட்சியர் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக பிரபுசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

author img

By

Published : Jun 14, 2021, 2:39 AM IST

கரூர் மாவட்ட ஆட்சியர் மாற்றம் புதிய ஆட்சியராக பிரபுசங்கர் நியமனம்
கரூர் மாவட்ட ஆட்சியர் மாற்றம் புதிய ஆட்சியராக பிரபுசங்கர் நியமனம்

தமிழ்நாடு முழுவதும் 24 மாவட்ட ஆட்சியர்களை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரசாந்த் வடநேரே பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சென்னையில் உள்ள மெட்ரோ குடிநீர் விநியோக வாரியத்தின் கூடுதல் இயக்குனர் பிரபுசங்கர் கரூர் மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக சட்டபேரவை தேர்தலின் போது, தேர்தல் ஆணையத்தால் கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த மலர்விழி மாற்றப்பட்டு பிரசாந்த் மு வடநேரே நியமிக்கப்பட்டார்.

கரூர் மாவட்ட புதிய ஆட்சியர்
கரூர் மாவட்ட புதிய ஆட்சியர்

கரூர் மாவட்டத்தில் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்று 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அமைதியான வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நடத்தி அனைத்து கட்சி ஆதரவையும் பெற்றவர் பிரசாந்த் மு வடநேரே, கரூர் மாவட்டத்தில் கரோன 2ஆம் அலையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல தேர்தல் நேரத்தில் நியமிக்கப்பட்ட கரூர் மாவட்ட எஸ்பி சசாங் சாய் கடந்த ஜூன் 5ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது கரூர் மாவட்ட ஆட்சியர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் 24 மாவட்ட ஆட்சியர்களை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரசாந்த் வடநேரே பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சென்னையில் உள்ள மெட்ரோ குடிநீர் விநியோக வாரியத்தின் கூடுதல் இயக்குனர் பிரபுசங்கர் கரூர் மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக சட்டபேரவை தேர்தலின் போது, தேர்தல் ஆணையத்தால் கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த மலர்விழி மாற்றப்பட்டு பிரசாந்த் மு வடநேரே நியமிக்கப்பட்டார்.

கரூர் மாவட்ட புதிய ஆட்சியர்
கரூர் மாவட்ட புதிய ஆட்சியர்

கரூர் மாவட்டத்தில் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்று 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அமைதியான வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நடத்தி அனைத்து கட்சி ஆதரவையும் பெற்றவர் பிரசாந்த் மு வடநேரே, கரூர் மாவட்டத்தில் கரோன 2ஆம் அலையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல தேர்தல் நேரத்தில் நியமிக்கப்பட்ட கரூர் மாவட்ட எஸ்பி சசாங் சாய் கடந்த ஜூன் 5ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது கரூர் மாவட்ட ஆட்சியர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.