ETV Bharat / state

ஜோதிமணியை கொலை செய்ய அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டம்?

author img

By

Published : Mar 30, 2019, 12:41 PM IST

கரூர்: பரப்புரை செய்யும் இடத்திற்கு எல்லாம் அமைச்சர் விஜயபாஸ்கர் கத்தியுடன் ஆட்களை அனுப்பி மிரட்டுவதாக காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.

ஜோதிமணி

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஜோதிமணி தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக நேற்று அரவக்குறிச்சியை அடுத்த ஆண்டிப்பட்டி கோட்டை, லிங்கமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தபோது பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

ஏற்கனவே பேசி வைத்துக்கொண்டபடி, அதிமுக தொண்டர் திருமூர்த்தி என்பவர் எதிர்க்கட்சி வேட்பாளர் காசு கொடுத்து ஆரத்தி எடுக்க வைப்பதாக கூறி கோஷமிட, அதை மற்றொரு அதிமுக தொண்டரான பெரியசாமி என்னும் இளைஞர் செல்ஃபோனில் வீடியோ எடுக்க, அங்குவந்த அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் இளைஞர்கள் இருவரையும் தாக்கி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து பெரியசாமி, திருமூர்த்தி ஆகிய இருவரும் திமுக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த சிலர் தங்களை தாக்கியதாக கூறி கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

இதையடுத்து, பரப்புரையின்போது கலவரங்களைத் தூண்டிய நபர்கள் மீதும், அவர்களை ஊக்குவித்தவர்கள் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகாவல்நிலையத்தில்ஜோதிமணி புகார் அளித்தார்.

பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அதிமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த இரு இளைஞர்கள் திட்டமிட்டு தகராறில் ஈடுபட்டனர்.

ஜோதிமணி செய்தியாளர் சந்திப்பு

இதுகுறித்து, உரிய விசாரணை நடத்த காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். மேலும், அமைச்சர் விஜயபாஸ்கர்தான் இதுபோன்ற தனது கட்சியினரை தூண்டிவிட்டு நாங்கள் செல்லுமிடமெல்லாம் கத்தியை காட்டி மிரட்டி வருகிறார் என குற்றம்சாட்டினார்.

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஜோதிமணி தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக நேற்று அரவக்குறிச்சியை அடுத்த ஆண்டிப்பட்டி கோட்டை, லிங்கமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தபோது பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

ஏற்கனவே பேசி வைத்துக்கொண்டபடி, அதிமுக தொண்டர் திருமூர்த்தி என்பவர் எதிர்க்கட்சி வேட்பாளர் காசு கொடுத்து ஆரத்தி எடுக்க வைப்பதாக கூறி கோஷமிட, அதை மற்றொரு அதிமுக தொண்டரான பெரியசாமி என்னும் இளைஞர் செல்ஃபோனில் வீடியோ எடுக்க, அங்குவந்த அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் இளைஞர்கள் இருவரையும் தாக்கி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து பெரியசாமி, திருமூர்த்தி ஆகிய இருவரும் திமுக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த சிலர் தங்களை தாக்கியதாக கூறி கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

இதையடுத்து, பரப்புரையின்போது கலவரங்களைத் தூண்டிய நபர்கள் மீதும், அவர்களை ஊக்குவித்தவர்கள் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகாவல்நிலையத்தில்ஜோதிமணி புகார் அளித்தார்.

பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அதிமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த இரு இளைஞர்கள் திட்டமிட்டு தகராறில் ஈடுபட்டனர்.

ஜோதிமணி செய்தியாளர் சந்திப்பு

இதுகுறித்து, உரிய விசாரணை நடத்த காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். மேலும், அமைச்சர் விஜயபாஸ்கர்தான் இதுபோன்ற தனது கட்சியினரை தூண்டிவிட்டு நாங்கள் செல்லுமிடமெல்லாம் கத்தியை காட்டி மிரட்டி வருகிறார் என குற்றம்சாட்டினார்.

Intro:அமைச்சர் கத்தியுடன் ஆட்களை அனுப்பி வாக்கு சேகரிக்கும் இடத்தில் மிரட்டுவதாக காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி குற்றச்சாட்டு


Body:கரூர் மாவட்டம் திமுக கூட்டணி காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஜோதிமணி கரூர் பாராளுமன்ற தேர்தலில் ஆங்காங்கே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈசநத்தம் ஆண்டிப்பட்டி கோட்டை லிங்கமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் வாக்குகள் சேகரித்த போது பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

இதனை அதிமுக தொண்டர் திருமூர்த்தி என்பவர் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆரத்தி என்று கூறி கோஷமிட்டார் மேலும் பெரியசாமி என்னும் இளைஞர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனைக் கண்ட அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளும் அவர்களைப் அடித்து பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் பெரியசாமி திருமூர்த்தி ஆகிய இருவரும் திமுகவினர் மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த சிலர் கொடூரமாக தாக்கியதாக கூறி கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி சார்பில் கரூர் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


பிரச்சாரத்தின்போது கலவரங்களை தூண்டிய சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் அவர்களை இவ்வாறு செய்யத் தூண்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி.

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அரவக்குறிச்சி உட்பட்ட பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அதிமுக கட்சியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் திட்டமிட்டு தகராறில் ஈடுபட்டனர் அதிமுக வேட்பாளர் செல்லுமிடமெல்லாம் எதிர்ப்பு கிளம்பி வரும் செய்தி பரவலாக செய்தித்தாள்களில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது அதனைப்போல எங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சித்தரிக்கும் வகையில் இந்த நாடகம் நடந்து இருக்கிறது என்று கூறினார்.

திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக எனக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் இதுபோன்ற வேலைகளை செய்து வருகின்றனர்.

கரூர் அமைச்சர் விஜயபாஸ்கர் இதுபோன்று தனது கட்சியினரின் தூண்டிவிட்டு செல்லுமிடமெல்லாம் கத்தியை காட்டி மிரட்டி வருகிறார் இதுபோன்று செய்வதால் என் நிலைமை என்ன ஆவது என கேள்வி எழுப்பினார் கரூர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி.

இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரையும் காண அதிமுக சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் மருத்துவமனைக்கு வந்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.



வீடியோ FTP மூலம் அனுப்பப்பட்டுள்ளது

file name:- TN_KRR_01_EX_MP_THAMIDURAI_ELECTION_CAMPAIGN_7205677


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.