ETV Bharat / state

கரூரும் அரவக்குறிச்சியும் எனது இரு கண்கள் - செந்தில்பாலாஜி

author img

By

Published : Apr 3, 2021, 10:32 AM IST

கரூர்: பல்லை உடைப்பேன் எனப்பேசிய பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு அரவக்குறிச்சி மக்கள் வரும் 6 ஆம் தேதி பதில் அளிப்பார்கள் என கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

senthil balaji
senthil balaji

அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோவை ஆதரித்து, கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில்பாலாஜி, நொய்யல் குறுக்குசாலை, குப்பம், எலவனூர், பள்ளப்பட்டி பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, “25 ஆண்டுகள் மக்கள் சேவை ஆற்றி வருகிறேன். கடுஞ்சொற்களை தனிப்பட்ட முறையில் பயன்படுத்தியதில்லை. யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியதில்லை. ஆனால், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் என் பல்லை உடைப்பேன் எனப் பேசியிருக்கிறார். அதுகுறித்து ஏன் நீங்கள் பதிலளிக்கவில்லை என்று சில பேர் கேட்கின்றனர். அதற்கு பதில் வரும் 6 ஆம் தேதி வாக்காளர்கள் அளிப்பார்கள்.

கரூரும் அரவக்குறிச்சியும் எனது இரு கண்கள் - செந்தில்பாலாஜி

இம்முறை 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும். அரவக்குறிச்சி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் சட்டப்பேரவை உறுப்பினர் ஆளுங்கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும். நான் கரூர் தொகுதியில் போட்டியிட்டாலும் அரவக்குறிச்சி தொகுதி எனது இரு கண்களில் ஒன்று. நான் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை உங்களுக்காக உழைத்து நிறைவேற்றித் தருவேன்” என்றார்.

இதையும் படிங்க: மோடியின் வேண்டுதலை மீனாட்சி அம்மன் நிறைவேற்றமாட்டார் - நடிகை ரோகிணி

அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோவை ஆதரித்து, கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில்பாலாஜி, நொய்யல் குறுக்குசாலை, குப்பம், எலவனூர், பள்ளப்பட்டி பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, “25 ஆண்டுகள் மக்கள் சேவை ஆற்றி வருகிறேன். கடுஞ்சொற்களை தனிப்பட்ட முறையில் பயன்படுத்தியதில்லை. யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியதில்லை. ஆனால், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் என் பல்லை உடைப்பேன் எனப் பேசியிருக்கிறார். அதுகுறித்து ஏன் நீங்கள் பதிலளிக்கவில்லை என்று சில பேர் கேட்கின்றனர். அதற்கு பதில் வரும் 6 ஆம் தேதி வாக்காளர்கள் அளிப்பார்கள்.

கரூரும் அரவக்குறிச்சியும் எனது இரு கண்கள் - செந்தில்பாலாஜி

இம்முறை 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும். அரவக்குறிச்சி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் சட்டப்பேரவை உறுப்பினர் ஆளுங்கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும். நான் கரூர் தொகுதியில் போட்டியிட்டாலும் அரவக்குறிச்சி தொகுதி எனது இரு கண்களில் ஒன்று. நான் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை உங்களுக்காக உழைத்து நிறைவேற்றித் தருவேன்” என்றார்.

இதையும் படிங்க: மோடியின் வேண்டுதலை மீனாட்சி அம்மன் நிறைவேற்றமாட்டார் - நடிகை ரோகிணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.