ETV Bharat / state

கரூரில் அரசுத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் - Free coaching class for Government Examination in Karur

கரூர்: மயிலிறகு தனியார் அகாதமி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவிகளுக்காக இலவச அரசுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வருகின்ற 26ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

கரூரில் அரசு தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்
கரூரில் அரசு தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்
author img

By

Published : Jan 20, 2020, 5:21 PM IST

கரூர் மாவட்டம் தாந்தோணி மலைப்பகுதியில் இருக்கக்கூடிய மயிலிறகு அகாதமி மற்றும் அறக்கட்டளை மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவிகளுக்காக இலவச அரசுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வருகின்ற 26ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இது குறித்து மயிலிறகு அகாதமியை வழிநடத்தும் சிரஞ்சீவி கூறியபோது, "கிராமப்புறத்தில் குறிப்பாகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவிகளுக்கென இந்த இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த இலவச பயிற்சி வகுப்புகள் மூலம் மாணவர்கள் அரசுத் தேர்வில் எளிதில் வெற்றிபெறலாம். மேலும் முன்னதாக அரசுத் தேர்வுக்கு படித்துத்தேறியவர்களைக் கொண்டு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது" என்றார்.

மயிலிறகு அகாதமியை வழிநடத்தும் சிரஞ்சீவி பேட்டி

மேலும், "இந்த அகாதமி மூலம், நூலக வசதி சட்டம் பற்றி தெரிந்து கொள்ளுதல், மாதம் ஒருமுறை மருத்துவரை அழைத்து உடல் நலம் குறித்து ஆலோசனைக் கூட்டம் போன்றவையும் நடத்தப்படுகிறது. எனவே மாணவ மாணவிகள் இதனைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த அகாதமி மற்றும் அறக்கட்டளையின் மூலம் தன்னார்வ தொண்டர்கள் கலந்துகொண்டு நிதி உதவிகள் செய்துவருகின்றனர்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:

பட்ஜெட் 2020-21: அல்வா கிண்டிய நிதி அமைச்சர்

கரூர் மாவட்டம் தாந்தோணி மலைப்பகுதியில் இருக்கக்கூடிய மயிலிறகு அகாதமி மற்றும் அறக்கட்டளை மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவிகளுக்காக இலவச அரசுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வருகின்ற 26ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இது குறித்து மயிலிறகு அகாதமியை வழிநடத்தும் சிரஞ்சீவி கூறியபோது, "கிராமப்புறத்தில் குறிப்பாகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவிகளுக்கென இந்த இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த இலவச பயிற்சி வகுப்புகள் மூலம் மாணவர்கள் அரசுத் தேர்வில் எளிதில் வெற்றிபெறலாம். மேலும் முன்னதாக அரசுத் தேர்வுக்கு படித்துத்தேறியவர்களைக் கொண்டு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது" என்றார்.

மயிலிறகு அகாதமியை வழிநடத்தும் சிரஞ்சீவி பேட்டி

மேலும், "இந்த அகாதமி மூலம், நூலக வசதி சட்டம் பற்றி தெரிந்து கொள்ளுதல், மாதம் ஒருமுறை மருத்துவரை அழைத்து உடல் நலம் குறித்து ஆலோசனைக் கூட்டம் போன்றவையும் நடத்தப்படுகிறது. எனவே மாணவ மாணவிகள் இதனைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த அகாதமி மற்றும் அறக்கட்டளையின் மூலம் தன்னார்வ தொண்டர்கள் கலந்துகொண்டு நிதி உதவிகள் செய்துவருகின்றனர்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:

பட்ஜெட் 2020-21: அல்வா கிண்டிய நிதி அமைச்சர்

Intro:


Body:கரூர் மாவட்டத்தில் மயிலிறகு தனியார் அகாடமி மூலமாக டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி வகுப்புகள்.

கரூர் மாவட்டம் தாந்தோணி மலை பகுதியில் இருக்கக்கூடிய மயிலிறகு அகாடமி மற்றும் அறக்கட்டளை மூலம் கிராமப் பகுதியில் இருக்கக்கூடிய மாணவ-மாணவியர் அதாவது பொருளாதாரத்திலும் வசதிகளும் பின்தங்கிய மாணவ மாணவிகளுக்காக இலவச அரசு தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வருகின்ற 26ஆம் தேதி குடியரசு தினவிழா அன்று துவங்க உள்ளது.

இதுகுறித்து மயிலிறகு அகாடமியை இளைஞர் சிரஞ்சீவி வழி நடத்தி வருகிறார் மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் :-

கிராமப்புறத்தில் குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவிகளுக்கு என இந்த இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன இந்த இலவச பயிற்சி வகுப்புகள் மூலம் மாணவர்கள் அரசு தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம் மேலும் இங்கு பயிற்சி அளிக்கப்படும் ஆசிரியர்கள் முன்னதாக அரசு தேர்வுக்கு படித்துத் தேறிய ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது, மேலும் அகாடமி மூலம் நூலக வசதி சட்டம் பற்றி தெரிந்து கொள்ளுதல் மாதம் ஒருமுறை மருத்துவரை அழைத்து உடல் நலம் குறித்து ஆலோசனை விவாதம் போன்றவை நடத்தப்படுகிறது எனவே மாணவ மாணவிகள் இதனை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த அகடமி மற்றும் அறக்கட்டளையின் மூலம் தன்னார்வ தொண்டர்கள் கலந்துகொண்டு நிதி உதவி போன்றவை செய்து வருகின்றனர் எனவே கிராமப்புற மாணவர்கள் இலவச பயிற்சி வகுப்பு அரசுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என கூறினார்.


Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.