ETV Bharat / state

கரூர் அரவக்குறிச்சியில் ரூ.5.63 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

author img

By

Published : Mar 19, 2019, 2:53 PM IST

கரூர்: ஆண்டிபட்டிகோட்டை சுங்கச்சாவடி பகுதியில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் நடத்திய சோதனையில் ஆம்னி வேனில் ரூ.5.63 கோடி மதிப்பிலான 94 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்த வாகனம்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்துள்ள ஆண்டிபட்டிகோட்டை சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஆம்னி வேனை சோதனையிட்டதில், ரூ.5.63 கோடி மதிப்பிலான 94 கிலோ தங்க நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அவ்வாகனத்தையும், தங்க நகைகளையும் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், இன்று காலை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான அன்பழகன் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர், மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் நடத்திய விசாரணையில், மதுரையிலிருந்து சேலத்திற்கு தனியார் நிறுவனம் மூலம் தங்க நகைகள் கொண்டுவரப்பட்டதாக கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, தனியார் நிறுவனத்தின் சார்பில் நகைகளுக்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும், பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு அதிகம் என்பதால், மறுசோதனைக்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு ஆவணங்களை ஆட்சியர் ஆய்வு செய்தபின் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்துள்ள ஆண்டிபட்டிகோட்டை சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஆம்னி வேனை சோதனையிட்டதில், ரூ.5.63 கோடி மதிப்பிலான 94 கிலோ தங்க நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அவ்வாகனத்தையும், தங்க நகைகளையும் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், இன்று காலை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான அன்பழகன் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர், மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் நடத்திய விசாரணையில், மதுரையிலிருந்து சேலத்திற்கு தனியார் நிறுவனம் மூலம் தங்க நகைகள் கொண்டுவரப்பட்டதாக கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, தனியார் நிறுவனத்தின் சார்பில் நகைகளுக்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும், பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு அதிகம் என்பதால், மறுசோதனைக்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு ஆவணங்களை ஆட்சியர் ஆய்வு செய்தபின் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Intro:5 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்


Body:கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதி ஆண்டிபட்டி கோட்டை சுங்கச்சாவடி பகுதியில் நேற்று இரவு ஆய்வுசெய்த பறக்கும் படை அதிகாரிகள் பரிசோதனையின்போது ஆம்னி வேனில் சுமார் 94 கிலோ கிராம் எடை உள்ள 5 கோடியே 60 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் இருப்பது கண்டறியப்பட்டு அந்த வாகனம் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதனடிப்படையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரியுமான அன்பழகன் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் விரைந்து செய்து ஆய்வு செய்தனர் ஆய்வின் அடிப்படையில் மதுரையில் இருந்து சேலத்திற்கு தனியார் கம்பெனியின் மூலம் பல்வேறு தங்க நகைகள் கொண்டுவரப்பட்டதாக கண்டறியப்பட்டது நகைகளுக்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் தேர்தல் ஆணையம் பத்து லட்சத்திற்கு அதிகமான மதிப்புடைய பொருட்கள் மற்றும் பணம் ஆவணத்தின் அடிப்படையில் விசாரித்து அளிக்கப்பட வேண்டும் என்பதால் போலீசார் நகைகளை பறிமுதல் செய்ததோடு விசாரணையும் நடத்தி வருகின்றனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.