ETV Bharat / state

நீட் பயிற்சி மையங்களில் தொடரும் வருமான வரித்துறை சோதனை - karur latest news

கரூர்: நீட் பயிற்சி மையங்களில் ரூ.150 கோடி வரை முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின்பேரில் வருமான வரித்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Breaking News
author img

By

Published : Oct 15, 2019, 9:30 AM IST

நாடு முழுவதும் உள்ள நீட் பயிற்சி மையங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகார் எழுந்தது. அதன்பேரில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கர்நாடகாவில் உள்ள நீட் பயிற்சி மையங்களில் நடந்த சோதனையில் 100 கோடி ரூபாய் வரை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

இதைபோல் தமிழ்நாட்டில் சென்னை, நாமக்கல், பெருந்துறை, கரூர் ஆகிய பகுதிகளில் உள்ள நீட் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறையினர் இரண்டு நாட்களாக சோதனை மேற்கொண்டனர்.

வெள்ளி வியாபாரியிடம் 15 லட்சம் மதிப்புள்ள 30 கிலோ வெள்ளி பறிமுதல்!

இந்த சோதனையில் சுமார் 150 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதை அலுவலர்கள் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து இரவு நேரத்திலும் சம்பந்தப்பட்ட பயிற்சி மைய உரிமையாளர்களுக்கு சொந்தமான வீடு, பினாமிகள் வீடு, கல்லூரி உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை ரூ. 30 கோடி அளிவிற்கு ரொக்கம், ஆவணங்களைக் கைப்பற்றியுள்ள வருமான வரித்துறையினர் மீதமுள்ளவற்றை கைப்பற்றும் நோக்கில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

சோதனை நடைபெறும் தனியார் பள்ளி

இதேபோல் கரூர் மண்மங்கலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியிலும் வருமான வரித்துறை அலுவலர்கள் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள நீட் பயிற்சி மையங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகார் எழுந்தது. அதன்பேரில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கர்நாடகாவில் உள்ள நீட் பயிற்சி மையங்களில் நடந்த சோதனையில் 100 கோடி ரூபாய் வரை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

இதைபோல் தமிழ்நாட்டில் சென்னை, நாமக்கல், பெருந்துறை, கரூர் ஆகிய பகுதிகளில் உள்ள நீட் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறையினர் இரண்டு நாட்களாக சோதனை மேற்கொண்டனர்.

வெள்ளி வியாபாரியிடம் 15 லட்சம் மதிப்புள்ள 30 கிலோ வெள்ளி பறிமுதல்!

இந்த சோதனையில் சுமார் 150 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதை அலுவலர்கள் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து இரவு நேரத்திலும் சம்பந்தப்பட்ட பயிற்சி மைய உரிமையாளர்களுக்கு சொந்தமான வீடு, பினாமிகள் வீடு, கல்லூரி உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை ரூ. 30 கோடி அளிவிற்கு ரொக்கம், ஆவணங்களைக் கைப்பற்றியுள்ள வருமான வரித்துறையினர் மீதமுள்ளவற்றை கைப்பற்றும் நோக்கில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

சோதனை நடைபெறும் தனியார் பள்ளி

இதேபோல் கரூர் மண்மங்கலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியிலும் வருமான வரித்துறை அலுவலர்கள் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Intro:நாமக்கல் நீட் பயிற்சி மையத்தில் ஐ.டி. ரைடு. தொடர்ச்சி கரூரில் உள்ள அந்த நிறுவனத்தின் பள்ளியிலும் வருமான வரித்துரையினர் இரவிலும் சோதனை ! ரூ 150 கோடி வரை வரி ஏய்ப்பு புகார் எதிரொலிBody:நாமக்கல் நீட் பயிற்சி மையத்தில் ஐ.டி. ரைடு. தொடர்ச்சி கரூரில் உள்ள அந்த நிறுவனத்தின் பள்ளியிலும் வருமான வரித்துரையினர் இரவிலும் சோதனை ! ரூ 150 கோடி வரை வரி ஏய்ப்பு புகார் எதிரொலி


நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனையிட்டு வரும் நிலையில் நேற்று கர்நாடகாவில் உள்ள நீட் பயிற்சி மையங்களில் 100 கோடி ரூபாய் கருப்பு பணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் நீட் பயிற்சி மையங்களில் வருமானவரி அதிகாரிகள் சோதனை வேட்டையில் இறங்கியுள்ளனர். குறிப்பாக சென்னை, பெருந்துறை, கரூர், நாமக்கல் ஆகிய இடங்களில் வருமான வரி துறை சோதனை நடத்தியது. இதில் நீட் நுழைவு தேர்வுக்காக மாணவர்களிடம் பெறப்படும் தொகை, எம்.பி.பி.எஸ் சீட்டிற்காக பெறப்படும் தொகை ஆகியவற்றை முறையான பதிவேடு இல்லாமல் பெறப்பட்டு வரி ஏய்ப்பு செய்ததன் விளைவாக நாமக்கல் கல்வி மையம் ஒன்றில் 30 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மொத்தம் 17 நீட் பயிற்சி மையங்களில் நடந்து வரும் இந்த சோதனையில் நாமக்கல் மையம் லாவகமாக சிக்கியுள்ளது. 30 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் மேலும் 150 கோடி ரூபாய் வரைக்கும் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்று கர்நாடகாவில் நடைபெற்ற சோதனையில் முன்னாள் துணை முதல்வரான பரமேஸ்வராவிற்குக்கு சொந்தமான 30 இடங்களில் சோதனை நடைபெற்று 8 .82 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல முக்கிய பிரமுகர்களின் வீடு மற்றும் கல்வி மையங்களில் நடத்திய சோதனையில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில் கரூர் மண்மங்கலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியிலும் இதே போல, இரவு வரை தொடர் வருமான வரித்துறையினர் தீவிர ரைடு நடத்தி வந்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.