ETV Bharat / state

18 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய ஆற்றுபாளையம் நீர்த்தேக்கம் - பாசனத்திற்கு  திறப்பு! - போக்குவரத்து அமைச்சர் திறந்து வைத்தார்

கரூர்: 18 ஆண்டுகளுக்குப் பின்பு கார்விழி ஆற்று பாளையம் அணைக்கட்டை தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் திறந்து வைத்தார்.

நீர்தேக்கத்தை திறந்து வைக்கும் அமைச்சர்
author img

By

Published : Nov 10, 2019, 11:19 PM IST

கரூர் மாவட்டம் கார்விழி ஆற்று பாளையம் அணைக்கட்டு மிகவும் பழமையான அணைக்கட்டுகளில் ஒன்றாகும். முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த அணைக்கட்டு, முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் அணை 1/4 டிஎம்சி தண்ணீர் சேமிக்கும் அளவிற்கு புதுப்பிக்கப்பட்டது.

இந்த அணைக்கட்டு கடந்த 18 வருடங்களாக தண்ணீர் நிரம்பாததாலும், கழிவுநீர் கலப்பது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததாலும் திறக்கப்படாமல் இருந்தது. இந்த அணைக்கட்டு தற்போது முழுக்கொள்ளவை எட்டியதால், பாசனத்திற்காக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்தார்.

பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வரக்கூடிய சாயப்பட்டறை கழிவு நீர் நொய்யல் ஆறு வழியாக இந்த அணைக்கட்டில் கலப்பதால், அணையின் நீர்த் தூய்மை கெட்டு விட்டதாக 1999ஆம்ஆண்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அணைக்கட்டு நீரை உபயோகிக்க தடை விதித்தது.

நீர்தேக்கத்தை திறந்து வைக்கும் அமைச்சர்

இந்நிலையில் 1999ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்த இந்த அணையின் நீரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, விவசாய நலனுக்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மூலம் கிட்டத்தட்ட 19 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசனம் பெறும். 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரை அடைத்து, மீண்டும் அணைக்கட்டில் இருந்து மூன்று மாதத்திற்கு திறக்கப்படும்' என்றார்.


இதையும் படிங்க:கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் சென்றடைய நடவடிக்கை

கரூர் மாவட்டம் கார்விழி ஆற்று பாளையம் அணைக்கட்டு மிகவும் பழமையான அணைக்கட்டுகளில் ஒன்றாகும். முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த அணைக்கட்டு, முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் அணை 1/4 டிஎம்சி தண்ணீர் சேமிக்கும் அளவிற்கு புதுப்பிக்கப்பட்டது.

இந்த அணைக்கட்டு கடந்த 18 வருடங்களாக தண்ணீர் நிரம்பாததாலும், கழிவுநீர் கலப்பது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததாலும் திறக்கப்படாமல் இருந்தது. இந்த அணைக்கட்டு தற்போது முழுக்கொள்ளவை எட்டியதால், பாசனத்திற்காக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்தார்.

பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வரக்கூடிய சாயப்பட்டறை கழிவு நீர் நொய்யல் ஆறு வழியாக இந்த அணைக்கட்டில் கலப்பதால், அணையின் நீர்த் தூய்மை கெட்டு விட்டதாக 1999ஆம்ஆண்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அணைக்கட்டு நீரை உபயோகிக்க தடை விதித்தது.

நீர்தேக்கத்தை திறந்து வைக்கும் அமைச்சர்

இந்நிலையில் 1999ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்த இந்த அணையின் நீரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, விவசாய நலனுக்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மூலம் கிட்டத்தட்ட 19 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசனம் பெறும். 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரை அடைத்து, மீண்டும் அணைக்கட்டில் இருந்து மூன்று மாதத்திற்கு திறக்கப்படும்' என்றார்.


இதையும் படிங்க:கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் சென்றடைய நடவடிக்கை

Intro:நீதிமன்றத்தில் திறக்கக்கூடாது என்று நிலுவையில் இருந்த அணையை 18 ஆண்டுகளுக்குப் பின்பு தமிழக போக்குவரத்துறை அமைச்சர் திறப்பு


Body:கரூர் மாவட்டம் தென்னிலை அருகில் இருக்கக்கூடிய கார்விழி ஆற்று பாளையம் அணைக்கட்டை தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

கரூர் மாவட்டம் கார்விழி ஆற்று பாளையம் அணைக்கட்டு மிகவும் பழமையான அணைக்கட்டுகளில் ஒன்றாகும் முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்ட அணைக்கட்டு முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் உடைய ஆட்சிக்காலத்தில் அணை 1/4 டிஎம்சி தண்ணீர் சேமிக்க கூடிய அளவிற்கு புதுப்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் தண்ணீரை திறந்து வைத்தார் மேலும் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார் அவருடன் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏனைய அரசு அதிகாரிகள் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு நேர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கூறுகையில் :-

திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வரக்கூடிய சாயப்பட்டறை கழிவு நீர் நொய்யல் என்கின்ற பகுதி வழியாக இந்த அணைக்கட்டில் கூடிய பாசன வசதி பெறக்கூடிய தண்ணீரில் கலப்பதன் மூலம் இந்த அணையின் தண்ணீர் தூய்மை கெட்டு விட்டதாக கருதி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு 1999 ஆம் ஆண்டு தண்ணீரே உபயோகிக்க தடை விதிக்கப்பட்டது.

1999 முதல் தடை விதிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்த இந்த அணையானது தற்பொழுது இது போயிருக்கான் தண்ணீரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு விவசாய நலனுக்காக கிட்டத்தட்ட 19 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் பயன் அடையும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது இந்த தண்ணீரானது கிட்டத்தட்ட 53 கிலோமீட்டர் தூரம் இருக்கக்கூடிய கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இணைத்து விவசாயம் பயன்பெறும் மேலும் 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரை அடைத்து மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் தண்ணீர் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன் என தெரிவித்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.