ETV Bharat / state

கரூரில் கோயில் இடிப்பு; தனிநபருக்கு ஆதரவாக ஊராட்சி நிர்வாகம் செயல்படுவதாக குற்றச்சாட்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2023, 4:35 PM IST

Karur Temple Demolish Issue: அருகம்பாளையம் கிராமத்தில், பட்டியிலின அருந்ததியர் சமூகத்தினர் கடந்த 5 தலைமுறையாக பயன்படுத்தி வந்த கோயிலை இடித்து அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

karur Arunthathiyar community temple issue
கரூரில் கோயிலை இடித்த அதிகாரிகள்
அருந்ததியர் சமூகத்தினர் கோயிலை இடித்த அதிகாரிகள்

கரூர்: மண்மங்கலம் தாலுகா வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், அருகம்பாளையம் செம்மலர் நகர் அருந்ததியர் குடியிருப்பில், சுமார் 100 குடும்பத்தைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், அருகம்பாளையம் செம்மலர் நகர் பகுதியின் சாலை ஓரமாக மாரியம்மன் கோயில் மற்றும் கருப்பண்ணசாமி கோயில் உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மேலும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கோயிலில் தினமும் 2 கால பூஜைகள் செய்து வழிபாடு நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். இதனிடைய அந்த கோயிலின் பின்புறம் காலியாக உள்ள இடத்திற்கு உரிமையாளரான அருகம்பாளையம் வேலுச்சாமி என்பவர், அவரது இடத்தை சீரமைத்து மனைகளாக பிரித்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்து வருகிறார்.

இந்நிலையில், அந்த மனைகளுக்கு செல்வதற்கு ஏற்கனவே ஒரு பாதை இருந்த நிலையில், கோயிலின் அருகேயும் ஒருபாதை அமைக்க திட்டமிட்டு செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். மேலும் இந்த திடீர் பாதையால் கோயில் திருவிழாவின் போது, சாமி கும்பிட முடியாத சூழல் ஏற்படும் எனவும் கருதியுள்ளனர்.

ஆனால், வேலுச்சாமி காதப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் உதவியுடன், சாலை ஓரமாக உள்ள அரசு புறம்போக்கு இடத்தை காலி செய்ய 2 முறை நோட்டீஸ் வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து, நேற்று (செப்டம்பர் 1) காலை சுமார் 11 மணியளவில் காவல்துறை உதவியுடன் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு வந்து கருப்பண சாமி கற்கோயிலை அகற்றியதால் அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையெடுத்து பொதுமக்களை 15-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் வெங்கமேட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து இரவு 6.30 மணியளவில் விடுவித்தனர். மேலும், ஜெசிபி இயந்திரத்தை கொண்டு வந்து கருப்பணசாமி கோயிலுக்காக போடப்பட்டிருந்த பந்தலையும் சாமி சிலைகளையும் அகற்றினர்.

மேலும், சம்பவ இடத்திற்கு வந்த கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, பொதுமக்கள் ஒத்துழைப்பு தராவிட்டால் கோயிலை முழுமையாக இடிப்பேன் என்று கூறியதால், அங்கே கூடியிருந்த பெண்கள் பக்தியுடன் அருள் வந்து ஆடினார்கள். மேலும், தனிநபருக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி அரசு அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தற்போதுவரை, ஐந்து தலைமுறையாக பட்டியலின அருந்ததியர் மக்கள் பயன்படுத்தி வந்த இடத்தை தனிநபர் பயன்பெற புறம்போக்கு ஆக்கிரமிப்பு என்று ஊராட்சி நிர்வாகத்தின் உதவியுடன் அகற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் கருப்பையா, ஆதித்தமிழர் கட்சியின் தொழிலாளர் பிரிவு மாநிலச் செயலாளர் துரைஅமுதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் புகழேந்தி, இந்திய கணசங்கம் கட்சி தலைவர் பேராசிரியர் முத்துச்சாமி, சமநீதி மக்கள் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் பட்டியலின மக்களுக்கு எதிராகவும், தனிநபருக்கு ஆதரவாகவும் அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, காதப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் திருபாவதி, வெங்கமேடு காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், இது தொடர்பாக மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கும் புகார் அனுப்பப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: உலக தேங்காய் தினம்: தேங்காயை இப்படித்தான் பயன்படுத்த வேண்டுமா?

அருந்ததியர் சமூகத்தினர் கோயிலை இடித்த அதிகாரிகள்

கரூர்: மண்மங்கலம் தாலுகா வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், அருகம்பாளையம் செம்மலர் நகர் அருந்ததியர் குடியிருப்பில், சுமார் 100 குடும்பத்தைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், அருகம்பாளையம் செம்மலர் நகர் பகுதியின் சாலை ஓரமாக மாரியம்மன் கோயில் மற்றும் கருப்பண்ணசாமி கோயில் உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மேலும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கோயிலில் தினமும் 2 கால பூஜைகள் செய்து வழிபாடு நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். இதனிடைய அந்த கோயிலின் பின்புறம் காலியாக உள்ள இடத்திற்கு உரிமையாளரான அருகம்பாளையம் வேலுச்சாமி என்பவர், அவரது இடத்தை சீரமைத்து மனைகளாக பிரித்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்து வருகிறார்.

இந்நிலையில், அந்த மனைகளுக்கு செல்வதற்கு ஏற்கனவே ஒரு பாதை இருந்த நிலையில், கோயிலின் அருகேயும் ஒருபாதை அமைக்க திட்டமிட்டு செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். மேலும் இந்த திடீர் பாதையால் கோயில் திருவிழாவின் போது, சாமி கும்பிட முடியாத சூழல் ஏற்படும் எனவும் கருதியுள்ளனர்.

ஆனால், வேலுச்சாமி காதப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் உதவியுடன், சாலை ஓரமாக உள்ள அரசு புறம்போக்கு இடத்தை காலி செய்ய 2 முறை நோட்டீஸ் வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து, நேற்று (செப்டம்பர் 1) காலை சுமார் 11 மணியளவில் காவல்துறை உதவியுடன் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு வந்து கருப்பண சாமி கற்கோயிலை அகற்றியதால் அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையெடுத்து பொதுமக்களை 15-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் வெங்கமேட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து இரவு 6.30 மணியளவில் விடுவித்தனர். மேலும், ஜெசிபி இயந்திரத்தை கொண்டு வந்து கருப்பணசாமி கோயிலுக்காக போடப்பட்டிருந்த பந்தலையும் சாமி சிலைகளையும் அகற்றினர்.

மேலும், சம்பவ இடத்திற்கு வந்த கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, பொதுமக்கள் ஒத்துழைப்பு தராவிட்டால் கோயிலை முழுமையாக இடிப்பேன் என்று கூறியதால், அங்கே கூடியிருந்த பெண்கள் பக்தியுடன் அருள் வந்து ஆடினார்கள். மேலும், தனிநபருக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி அரசு அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தற்போதுவரை, ஐந்து தலைமுறையாக பட்டியலின அருந்ததியர் மக்கள் பயன்படுத்தி வந்த இடத்தை தனிநபர் பயன்பெற புறம்போக்கு ஆக்கிரமிப்பு என்று ஊராட்சி நிர்வாகத்தின் உதவியுடன் அகற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் கருப்பையா, ஆதித்தமிழர் கட்சியின் தொழிலாளர் பிரிவு மாநிலச் செயலாளர் துரைஅமுதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் புகழேந்தி, இந்திய கணசங்கம் கட்சி தலைவர் பேராசிரியர் முத்துச்சாமி, சமநீதி மக்கள் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் பட்டியலின மக்களுக்கு எதிராகவும், தனிநபருக்கு ஆதரவாகவும் அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, காதப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் திருபாவதி, வெங்கமேடு காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், இது தொடர்பாக மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கும் புகார் அனுப்பப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: உலக தேங்காய் தினம்: தேங்காயை இப்படித்தான் பயன்படுத்த வேண்டுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.