ETV Bharat / state

கரோனாவால் பாதிக்கப்பட்ட எம்எல்ஏக்கள் குணமடைய வேண்டி மும்மத பிரார்த்தனை

author img

By

Published : Jul 29, 2020, 12:06 PM IST

கன்னியாகுமரி: கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் விரைவில் குணமடைய வேண்டி தொண்டர்கள் மும்மத பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

கரோனா பாதித்த எம்எல்ஏ-க்கள் குணமடைய வேண்டி தொண்டர்கள் மும்மத பிரார்த்தனை
கரோனா பாதித்த எம்எல்ஏ-க்கள் குணமடைய வேண்டி தொண்டர்கள் மும்மத பிரார்த்தனை

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், இந்த தொற்றால் 21 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை 27) கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ்குமார், கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். களத்தில் நின்று மக்களுக்கு நிவாரணப் பணிகளை வழங்கி வந்த தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் கரோனாவால் பாதிக்கப்பட்டதையறிந்த தொண்டர்கள் வேதனையடைந்தனர்.

இதனால் ராஜேஷ்குமார் எம்எல்ஏ விரைவில் குணமடைய வேண்டி சமூக வலைதளங்களில் காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்லாது தோழமை கட்சியினர், எதிர்க்கட்சியினர் என அனைவரும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுவரும் நிலையில், குமரி மாவட்டம் குலசேகரம் நகர காங்கிரஸ் கட்சியினர் சார்பில் திருவட்டார் கிழக்கு வட்டார தலைவர் கான்ஸ்டன் கிளீட்டஸ் தலைமையில் கிள்ளியூர் எம்எல்ஏ குணமடைய வேண்டி பாய்காடு ஆர்.சி.தேவாலயத்தில் மும்மத பிரார்த்தனை நடைபெற்றது.

அப்போது, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாகர்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் சுரேஷ் ராஜன் குணமடைய வேண்டியும் பிரார்த்தனை செய்தனர். இதில் பங்குதந்தை பென்னி சேவியர், குலசேகரம் சாய்பாபா, ஆலய பொறுப்பாளர் சங்கர், காவஸ்தலம், முஸ்லீம் ஜமாத் இமாம் அப்துல் காதர் மன்னான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், இந்த தொற்றால் 21 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை 27) கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ்குமார், கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். களத்தில் நின்று மக்களுக்கு நிவாரணப் பணிகளை வழங்கி வந்த தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் கரோனாவால் பாதிக்கப்பட்டதையறிந்த தொண்டர்கள் வேதனையடைந்தனர்.

இதனால் ராஜேஷ்குமார் எம்எல்ஏ விரைவில் குணமடைய வேண்டி சமூக வலைதளங்களில் காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்லாது தோழமை கட்சியினர், எதிர்க்கட்சியினர் என அனைவரும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுவரும் நிலையில், குமரி மாவட்டம் குலசேகரம் நகர காங்கிரஸ் கட்சியினர் சார்பில் திருவட்டார் கிழக்கு வட்டார தலைவர் கான்ஸ்டன் கிளீட்டஸ் தலைமையில் கிள்ளியூர் எம்எல்ஏ குணமடைய வேண்டி பாய்காடு ஆர்.சி.தேவாலயத்தில் மும்மத பிரார்த்தனை நடைபெற்றது.

அப்போது, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாகர்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் சுரேஷ் ராஜன் குணமடைய வேண்டியும் பிரார்த்தனை செய்தனர். இதில் பங்குதந்தை பென்னி சேவியர், குலசேகரம் சாய்பாபா, ஆலய பொறுப்பாளர் சங்கர், காவஸ்தலம், முஸ்லீம் ஜமாத் இமாம் அப்துல் காதர் மன்னான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.