ETV Bharat / state

வைக்கோல் விலை உயர்வு: விற்பனையாளர்கள் மகிழ்ச்சி... கால்நடை வளர்ப்போர் அதிர்ச்சி!

author img

By

Published : Dec 8, 2019, 5:48 PM IST

கன்னியாகுமரி: தொடர்மழை காரணமாக வைக்கோல் விலை திடீரென்று உயர்ந்ததால் கால்நடை வளர்ப்பவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

kanyakumari
vaikol

கன்னியாகுமரி மாவட்டத்தில் தாழாக்குடி, அருமநல்லூர், திருப்பதிசாரம், தேரூர், தேவகுளம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கோல் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக குமரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, வயல்களில் மழை நீர் தேங்கி நின்ற காரணத்தால் வைக்கோலை விவசாயிகளால் தனியாகப் பிரித்து எடுக்க முடியவில்லை. இதனால் சாதாரண அறுவடையில் ஒரு ஏக்கருக்கு சுமார் ஐம்பது கட்டுகள் வைக்கோல் கிடைக்கும் நிலையில், தற்போது ஒரு வெறும் பத்து கட்டுகள் கூட பிரித்து எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வைக்கோல் விலை மூன்று மடங்கு உயர்வு

இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் வைக்கோலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. 40 கிலோ கொண்ட ஒரு கட்டு 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்று மடங்கு உயர்ந்து கட்டு ஒன்று 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கால் நடை வளர்ப்பவர் - கன்னியாகுமரி.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைக்கோல் விலை மேலும் உயரும் என்று வைக்கோல் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வைக்கோல் விலை திடிரென உயர்ந்துள்ளது உள்ளூர் வைக்கோல் வியாபாரிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், விலை தொடர்ந்து உயர்ந்துவருவது கால்நடை வளர்ப்போரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. எனவே கால்நடை வளர்ப்பவர்களுக்கு அரசு உதவிசெய்ய முன் வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க: குன்னூரில் நடைபெற்ற தேயிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தாழாக்குடி, அருமநல்லூர், திருப்பதிசாரம், தேரூர், தேவகுளம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கோல் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக குமரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, வயல்களில் மழை நீர் தேங்கி நின்ற காரணத்தால் வைக்கோலை விவசாயிகளால் தனியாகப் பிரித்து எடுக்க முடியவில்லை. இதனால் சாதாரண அறுவடையில் ஒரு ஏக்கருக்கு சுமார் ஐம்பது கட்டுகள் வைக்கோல் கிடைக்கும் நிலையில், தற்போது ஒரு வெறும் பத்து கட்டுகள் கூட பிரித்து எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வைக்கோல் விலை மூன்று மடங்கு உயர்வு

இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் வைக்கோலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. 40 கிலோ கொண்ட ஒரு கட்டு 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்று மடங்கு உயர்ந்து கட்டு ஒன்று 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கால் நடை வளர்ப்பவர் - கன்னியாகுமரி.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைக்கோல் விலை மேலும் உயரும் என்று வைக்கோல் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வைக்கோல் விலை திடிரென உயர்ந்துள்ளது உள்ளூர் வைக்கோல் வியாபாரிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், விலை தொடர்ந்து உயர்ந்துவருவது கால்நடை வளர்ப்போரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. எனவே கால்நடை வளர்ப்பவர்களுக்கு அரசு உதவிசெய்ய முன் வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க: குன்னூரில் நடைபெற்ற தேயிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Intro:கன்னியாகுமரி மாவட்டத்தில் கால் நடை தீவனமான வைகோலுக்கு கடும் தட்டுபாடு. இதனால் கடந்த மாதம் 40 கிலோ கொண்ட ஒரு கட்டு 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போழுது மூன்று மடங்கு விலை உயர்ந்து கட்டு ஒன்று 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.. வைக்கோல் விலை உயர்வால் வைக்கோல் வியாபாரிகள் மகிழ்ச்சி. மேலும் விலை உயரும் என்பதால் கால் நடை வளர்போர்அதிர்ச்சி. Body:tn_knk_02_vaikol_velai_uyarvu_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கால் நடை தீவனமான வைகோலுக்கு கடும் தட்டுபாடு. இதனால் கடந்த மாதம் 40 கிலோ கொண்ட ஒரு கட்டு 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போழுது மூன்று மடங்கு விலை உயர்ந்து கட்டு ஒன்று 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.. வைக்கோல் விலை உயர்வால் வைக்கோல் வியாபாரிகள் மகிழ்ச்சி. மேலும் விலை உயரும் என்பதால் கால் நடை வளர்போர்அதிர்ச்சி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தாழாக்குடி ,அருமநல்லூர், திருப்பதிசாரம், தேரூர், தேவகுளம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடந்த கன்னி பூ நெல் சாகுபடி அறுவடை நேரத்தில் 40 கிலோ கொண்ட ஒரு கட்டு 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக குமரி மாவட்டதில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கன்னி பூ அறுவடை அறுவடை செய்யப்பட்ட வயல்களில் மழை நீர் தேங்கி நின்ற காரணத்தால் வைக்கோலை விவசாயிகளால் தனியாக பிரித்து எடுக்க முடியவில்லை. இதனால் சாதாரண அறுவடையில் ஒரு ஏக்கருக்கு சுமார் ஐம்பது கட்டுகள் கிடைக்கும் நிலையில் தற்பொழுது ஒரு ஏக்கர் வயலில் இருந்து பத்து கட்டு வைக்கோல் கூட பிரித்து எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.. இதன் காரணமாக குமரி மாவட்டதில் வைக்கோலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த கன்னி பூ சாகுபடி அறுவடையில் 40 கிலோ கொண்ட ஒரு கட்டு 200 ரூபாய் முதல் 250 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது வைக்கோல் விலை மூன்று மடங்கு உயர்ந்து கட்டு ஒன்று ரூபாய் 500 முதல் 600 ரூபாய் வரைக்கும் விற்ப்பனை செய்யப்பட்டு வருகிறது. குமரி மாவட்டதில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைக்கோல் விலை மேலும் உயரும் என்று வைக்கோல் வியாபாரிகள் தெரிவித்தனர். வைக்கோல் விலை திடிரென உயர்ந்துள்ளது உள்ளூர் வைக்கோல் வியாபாரிகளிடையே மகிழ்ச்சியை எற்ப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் வைக்கோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது கால்நடை வளர்போரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.எனவே கால்நடை வளர்ப்பவர்களுக்கு அரசு உதவி செய்ய முன் வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.