ETV Bharat / state

நன்றி! இப்படிக்கு திருமணம் ஆகாத 90's கிட்ஸ்ஸின் பேனர்! - unmarried

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் புதுவிளையில் திருமண வரன்களை தடுக்கும் நபர்களுக்கு நன்றி தெரிவித்து திருமணம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் வைத்த பேனர் அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

un-married-90-s-kids-banner
author img

By

Published : Aug 14, 2019, 8:15 PM IST

குமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே அமைந்துள்ள புதுவிளை கிராத்தில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த புதிவிளை கிராமத்தில் படித்த வேலை பார்க்கும் இளைஞர்கள் பலர் வரனுக்காக காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் திருமண வரனுக்காக இளைஞர்கள் குறித்து விசாரிக்க வருபவர்களிடம் சிலர் மறைமுகமாக இளைஞர்கள் குறித்து அவதூறு கூறி திருப்பி அனுப்பிவிடுகின்றனர். இதனால் பல இளைஞர்களுக்கு வரன் கிடைப்பதில் தடை ஏற்பட்டுள்ளது.

un-married-90-s-kids-banner
இளைஞர்களால் வைக்கப்பட்ட பேனர்

இதிலும் உச்சக்கட்டமாக பெண் வீட்டிற்கே சென்று வாலிபர்கள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து அவதூறு பரப்பும் நபர்களின் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்தனர். அதன்படி, முதற்கட்டமாக புதுவிளை பகுதியில் ஒரு மின்கம்பத்தில் விளம்பர பேனர் ஒன்றை வைத்தனர்.

அந்த பேனரில் முக்கிய அறிவிப்பு என்ற தலைப்பில் புதுவிளை இளைஞர்களுக்கு வரும் திருமண வரன்களை தடுத்து நிறுத்தும் அன்பு உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி நன்றி. மேலும் தங்கள் நற்பணி தொடருமாயின் சம்பந்தப்பட்டவர்களுடைய பெயர் புகைப்படம் ஆதாரத்துடன் வெளியிடப்படும்.

வரன் தேடும் இளைஞர்கள்

மேலும், திருமண வரன்களை தடுப்பதற்கு முன் கூட்டியே எங்களிடம் தகவல் தெரிவித்தால் வாகன வசதி செய்து தரப்படும் இப்படிக்கு திருமண வரன் தேடும் இளைஞர்கள் எனவும் அந்த பேனரில் குறிப்பிடப்பட்டு இருந்தது. திரைப்பட பாணியில் இளைஞர்களின் வரன்களை தடுத்து நிறுத்தும் நபர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பேனர் மூலம் இளைஞர்கள் கொடுத்த பதிலடி அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே அமைந்துள்ள புதுவிளை கிராத்தில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த புதிவிளை கிராமத்தில் படித்த வேலை பார்க்கும் இளைஞர்கள் பலர் வரனுக்காக காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் திருமண வரனுக்காக இளைஞர்கள் குறித்து விசாரிக்க வருபவர்களிடம் சிலர் மறைமுகமாக இளைஞர்கள் குறித்து அவதூறு கூறி திருப்பி அனுப்பிவிடுகின்றனர். இதனால் பல இளைஞர்களுக்கு வரன் கிடைப்பதில் தடை ஏற்பட்டுள்ளது.

un-married-90-s-kids-banner
இளைஞர்களால் வைக்கப்பட்ட பேனர்

இதிலும் உச்சக்கட்டமாக பெண் வீட்டிற்கே சென்று வாலிபர்கள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து அவதூறு பரப்பும் நபர்களின் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்தனர். அதன்படி, முதற்கட்டமாக புதுவிளை பகுதியில் ஒரு மின்கம்பத்தில் விளம்பர பேனர் ஒன்றை வைத்தனர்.

அந்த பேனரில் முக்கிய அறிவிப்பு என்ற தலைப்பில் புதுவிளை இளைஞர்களுக்கு வரும் திருமண வரன்களை தடுத்து நிறுத்தும் அன்பு உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி நன்றி. மேலும் தங்கள் நற்பணி தொடருமாயின் சம்பந்தப்பட்டவர்களுடைய பெயர் புகைப்படம் ஆதாரத்துடன் வெளியிடப்படும்.

வரன் தேடும் இளைஞர்கள்

மேலும், திருமண வரன்களை தடுப்பதற்கு முன் கூட்டியே எங்களிடம் தகவல் தெரிவித்தால் வாகன வசதி செய்து தரப்படும் இப்படிக்கு திருமண வரன் தேடும் இளைஞர்கள் எனவும் அந்த பேனரில் குறிப்பிடப்பட்டு இருந்தது. திரைப்பட பாணியில் இளைஞர்களின் வரன்களை தடுத்து நிறுத்தும் நபர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பேனர் மூலம் இளைஞர்கள் கொடுத்த பதிலடி அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் புதுவிளையில் திருமண வரன்களை தடுக்கும் நபர்களுக்கு நன்றி தெரிவித்து பேனர் வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட இளைஞர்ளின் இந்த அதிரடி நூதன அறிவிப்பு பேனரால் பரபரப்பு ஏற்பட்டது.

Body:குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே அமைந்துள்ளது புதுவிளை கிராமம். இந்த பகுதியில் அரசு ஊழியர்கள் கூலித்தொழிலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
பொருளாதார மற்றும் கல்வி ரீதியில் வளர்ச்சியடைந்த புதுவிளை கிராமத்தில் படித்த வேலை பார்க்கும் இளைஞர்கள் பலர் வரனுக்காக காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் திருமண வரனுக்காக இளைஞர்கள் குறித்து விசாரிக்க வருபவர்களை ஒரு கும்பல் தடுத்து நிறுத்தி மறைமுகமாக இளைஞர்கள் குறித்து அவதூறு கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
இதனால் பல இளைஞர்களுக்கு திருமண தடை ஏற்பட்டுள்ளது. சிலர் இளைஞர்கள் குறித்து அவதூறு தகவல் தெரிவிப்பதற்காக நீண்ட தூரம் பயணம் செய்து பெண் வீட்டாரிடம் வாலிபர்கள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து அவதூறு பரப்பும் நபர்களின் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்தனர். அதன்படி முதற்கட்டமாக புதுவிளை பகுதியில் ஒரு மின் கம்பத்தில் ஒரு விளம்பர பேனர் ஒன்றை வைத்தனர்.
இதை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். அந்த பேனரில் "முக்கிய அறிவிப்பு" என்ற தலைப்பில் புதுவிளை இளைஞர்களுக்கு வரும் திருமண வரன்களை தடுத்து நிறுத்தும் அன்பு உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி நன்றி. மேலும் தங்கள் நற்பணி தொடருமாயின் சம்பந்தப்பட்டவர்களுடைய பெயர் புகைப்படம் ஆதாரத்துடன் வெளியிடப்படும். குறிப்பு:- திருமண வரன்களை தடுப்பதற்கு முன் கூட்டியே எங்களிடம் தகவல் தெரிவித்தால் வாகன வசதி செய்து தரப்படும் இப்படிக்கு திருமண வரன் தேடும் இளைஞர்கள் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

திரைப்பட பாணியில் இளைஞர்களின் வரன்களை தடுத்து நிறுத்தும் நபர்களுக்கு நன்றி பேனர் மூலம் இளைஞர்கள் பதிலடி கொடுத்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.