கன்னியாகுமரி: நேற்று (டிச.3) வெளியான நான்கு மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட பாஜக அலுவலகத்தில் வைத்து, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "பாஜகவுக்கு இன்று (நேற்று) அற்புதமான நாள் இன்று. 5 மாநிலத்தில் தேர்தல்களில் 4 மாநில தேர்தலில் முடிவுகள் வந்துள்ளன.
அதில் மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று வரலாறு படைத்திருக்கிறது. குறிப்பாக தெலுங்கானாவிலும் கட்சியாகப் பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. அதேபோல், மத்தியப் பிரதேசத்தில் 166 எம்.எல்.ஏ-க்களுடன் வெற்றி பெற்றுள்ளோம். 2003-ல் இருந்தே ஆட்சி செய்து வருகிறோம். இடையில் 15 மாதங்கள் காங்கிரஸ் ஆட்சி இருந்தது.
சத்தீஸ்கரில் கடந்த முறை பாஜகவின் 15 எம்.எல்.ஏ-க்கள் வெற்றி பெற்றிருந்தார்கள். தற்போது, 56 எம்.எல்.ஏ-க்களுடன் ஆட்சி அமைக்கிறோம். ராஜஸ்தானைப் பொருத்தவரை, 115 எம்.எல் ஏ-க்களுடன் ஆட்சி அமைக்கிறோம். தெலங்கானாவில் 2018ஆம் ஆண்டு ஒரு எம்.எல்.ஏ இருந்த நிலையில், தற்போது 8 எம்.எல்.ஏ-க்கள் வெற்றி பெற்று உள்ளார்கள்.
இது 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் தான். 'இந்தியா' கூட்டணிக்குப் பிறகு நடந்த முதல் தேர்தல் இது. அவர்கள் தேர்தலின் போது ஒ.பி.சி சமூகத்துக்கு முன்னுரிமை இல்லை, இலவச திட்டங்கள் என்பது போன்ற பல பிரசாரங்களை காங்கிரஸ் கட்சி மக்களிடம் முன் வைத்தனர்.
ஆனால், அதை எல்லாம் இந்த மாநிலங்களில் முதலமச்சர் வேட்பாளரை முன்னிலை படுத்தாமல், கட்சியை மட்டும் முன்னிலைப்படுத்தி, பிரதமர் மோடியின் கேரன்டி வாக்குறுதி மூலம் வெற்றி பெற்று உள்ளோம். குறிப்பாக தெலங்கானாவில் கம்மாரெட்டி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ், பி.ஆர்.எஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர்களை தோர்கடித்து உள்ளோம்.
தெலங்கானாவில் பாஜக 8 இடத்தில் வென்றிருந்தாலும் காங்கிரஸ், பி.ஆர்.எஸ் கட்சிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தீர்மானித்தனர். இது கட்சிக்கு இரண்டாம் கட்ட வளர்ச்சி ஆகும். மேலும், 2028 தேர்தலில் தெலங்கானாவில் பாஜக ஆட்சி அமைக்கும்" என்று தெரிவித்தார்.
சனாதன பிரச்சாரமே கைகொடுத்தது: "சனாதனம் குறித்த பிரசாரம் வட மாநிலத்தில் எடுபட்டதாகச் சொல்கிறார்கள். ஆட்சி போனாலும் பரவாயில்லை சனாதன தர்மத்தை ஒழிப்பது தான் முக்கியம் என உதயநிதி கூறினார். மோடி கேரன்டியும், சனாதன பிரசாரமும் வடமாநில தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வெற்றியை கொடுத்துள்ளன.
2018ஆம் ஆண்டில் ஒரு எம்.எல்.ஏ இருந்தார், 2019ஆம் ஆண்டில் 4 எம்.பி-க்கள் இருந்தனர். இப்போது 8 எம்.எல்.ஏ வெற்றி பெற்றுள்ளனர். தெலுங்கானாவில் 2028ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க ஆட்சிக்கு வரும். 1998ஆம் ஆண்டு என்.டி.ஏ கூட்டணி ஆரம்பித்தார்கள்.