ETV Bharat / state

புத்தாண்டில் மது கொண்டாட்டம் - லாரி மோதி உயிரிழந்த மூவர்!

author img

By

Published : Jan 1, 2020, 9:20 PM IST

குமரி: களியல் அருகே புத்தாண்டை கொண்டாட மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற மூவர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

kanniyakumari
kanniyakumari

கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகேவுள்ள படபச்சை பகுதி தனியார் மதுபான பார் ஒன்றில், திருவரம்பு பகுதியைச் சேர்ந்த மகேஷ்(25), விஜயன்(44), பால்ராஜ்(42) ஆகிய மூவரும் மது அருந்தியுள்ளனர். பின்னர், மூவரும் வீடு திரும்ப இருசக்கர வாகனத்தில் ஏறி பாரை விட்டு வெளியே வரும்போது அவ்வழியே வந்த லாரி இவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

விபத்து ஏற்பட்ட பகுதி

இதையடுத்து லாரியை ஓட்டிவந்தவர், லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். தகவலறிந்து அங்கு விரைந்த அருமனை காவல்துறையினர், மூவரின் உடல்களையும் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநர் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கார் மரத்தில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகேவுள்ள படபச்சை பகுதி தனியார் மதுபான பார் ஒன்றில், திருவரம்பு பகுதியைச் சேர்ந்த மகேஷ்(25), விஜயன்(44), பால்ராஜ்(42) ஆகிய மூவரும் மது அருந்தியுள்ளனர். பின்னர், மூவரும் வீடு திரும்ப இருசக்கர வாகனத்தில் ஏறி பாரை விட்டு வெளியே வரும்போது அவ்வழியே வந்த லாரி இவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

விபத்து ஏற்பட்ட பகுதி

இதையடுத்து லாரியை ஓட்டிவந்தவர், லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். தகவலறிந்து அங்கு விரைந்த அருமனை காவல்துறையினர், மூவரின் உடல்களையும் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநர் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கார் மரத்தில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு!

Intro:குமரி மாவட்டம் களியல் அருகே பாரில் மது அருந்தி விட்டுமூன்று பேர் வந்த இருசக்கர வாகனம் லாரியில் மோதி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலி.ஓட்டுனர் தப்பியோட்டம். அருமனை போலிசார் விசாரணை.Body:tn_knk_06_accident_threedeth_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

குமரி மாவட்டம் களியல் அருகே பாரில் மது அருந்தி விட்டுமூன்று பேர் வந்த இருசக்கர வாகனம் லாரியில் மோதி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலி.ஓட்டுனர் தப்பியோட்டம். அருமனை போலிசார் விசாரணை.



கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே பட பச்சை பகுதியில் தனியார் மது பான பார் ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த பாரில் அரசு நிபந்தனையை மீறி அதிகாலை முதலே வியாபாரம் நடைபெற்று வருவதாக புகார் எழுந்து வரும் நிலையில் இன்று மது அருந்தி புத்தாண்டு கொண்டாடி விட்டு இருசக்கர வாகனத்தில் வெளியே வரும் போது எதிரே வந்த லாரியில் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.இதில் இருசக்கர வாகனத்தில் வந்த திருவரம்பு பகுதியை சேர்ந்த மகேஷ்( 25) விஜயன் (44)பால் ராஜ் (42) மூன்று பேர் சம்பவ இடத்திலே பலியாகினர்.இதனை பார்த்த ஓட்டுநர் லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு தப்பியோடிய நிலையில் லாரியை காவல் நிலையம் கொண்டு சென்று உடல்களை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு உடல் கூர் ஆய்வுக்கு அனுப்பி வைத்து அருமனை போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.புது வருட பிறப்பில் நண்பர்கள் மூன்று பேர் விபத்தில் மரணம் அடைந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.