ETV Bharat / state

சிதிலமடைந்து இடியும் நிலையில் உள்ள காந்தி மண்டபம்! - அலட்சியம் காட்டும் அரசு - The shining Gandhi Hall

கன்னியாகுமரி: மகாத்மா காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டுவரும் நிலையில், கன்னியாகுமரியில் சிதிலமடைந்து இடியும் நிலையிலுள்ள அவரது நினைவு மண்டபத்தை சீரமைக்கக் கோரி பலமுறை வலியுறுத்தியும் அரசு மெத்தனப்போக்கை கடைப்பிடித்துவருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சிதலமடைந்து கிடக்கும் காந்தி மண்டபம்
author img

By

Published : Oct 2, 2019, 9:03 AM IST

மகாத்மா காந்தியடிகளின் மறைவிற்கு பின்னர் 1948 பிப்ரவரி 12ஆம் தேதி அவரது அஸ்தி கன்னியாகுமரிக்கு கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்ட இடத்தில் 1956ஆம் ஆண்டு நினைவு மண்டபம் எழுப்பட்டது. இந்த மண்டபம் அமைந்து பல ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை சிலமுறை மட்டுமே பராமரிப்பு, வண்ணம் பூசும் பணிகள் நடைபெற்றுள்ளன.

மோசமான நிலையில் காந்தி மண்டபம்

இந்நிலையில், இன்று காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் வேளையில், அவரை மறந்தது போன்று நினைவு மண்டபத்தையும் மறந்துவிட்டார்களோ என்று நினைக்கத் தோன்றும் அளவில் அந்த மண்டபம் மிக மோசமான நிலையில் உள்ளது.

விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சிதிலமடைந்து கிடக்கும் காந்தி மண்டபம்

கடற்கரை காற்று காரணமாக மண்டபத்தின் பல பகுதிகள் சிதிலமடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இதேநிலை தொடர்ந்தால் கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் இருக்கிறதா என்று கேள்வியெழும் நிலை வந்துவிடும் என பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இதை கவனத்தில்கொண்டு அரசு விரைந்து செயல்பட்டு மண்டபத்தை புதுப்பிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

மகாத்மா காந்தியடிகளின் மறைவிற்கு பின்னர் 1948 பிப்ரவரி 12ஆம் தேதி அவரது அஸ்தி கன்னியாகுமரிக்கு கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்ட இடத்தில் 1956ஆம் ஆண்டு நினைவு மண்டபம் எழுப்பட்டது. இந்த மண்டபம் அமைந்து பல ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை சிலமுறை மட்டுமே பராமரிப்பு, வண்ணம் பூசும் பணிகள் நடைபெற்றுள்ளன.

மோசமான நிலையில் காந்தி மண்டபம்

இந்நிலையில், இன்று காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் வேளையில், அவரை மறந்தது போன்று நினைவு மண்டபத்தையும் மறந்துவிட்டார்களோ என்று நினைக்கத் தோன்றும் அளவில் அந்த மண்டபம் மிக மோசமான நிலையில் உள்ளது.

விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சிதிலமடைந்து கிடக்கும் காந்தி மண்டபம்

கடற்கரை காற்று காரணமாக மண்டபத்தின் பல பகுதிகள் சிதிலமடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இதேநிலை தொடர்ந்தால் கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் இருக்கிறதா என்று கேள்வியெழும் நிலை வந்துவிடும் என பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இதை கவனத்தில்கொண்டு அரசு விரைந்து செயல்பட்டு மண்டபத்தை புதுப்பிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

Intro:தேசப்பிதா மகாத்மா காந்திஜியின் 150வது பிறந்த நாளை இன்று கொண்டாடும் வேளையில் கன்னியாகுமரியில் உள்ள அவரது நினைவு மண்டபம் இடியும் தருவாயில் சிதிலமடைந்து கேட்பாரற்ற நிலையில் உள்ளது.Body:tn_knk_01_damage_gandhimandabam_script_TN10005

கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

தேசப்பிதா மகாத்மா காந்திஜியின் 150வது பிறந்த நாளை இன்று கொண்டாடும் வேளையில் கன்னியாகுமரியில் உள்ள அவரது நினைவு மண்டபம் இடியும் தருவாயில் சிதிலமடைந்து கேட்பாரற்ற நிலையில் உள்ளது.
மகாத்மா காந்திஜியின் மறைவிற்கு பின்னர் 1948ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதி அவரது அஸ்தி கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்ட இடத்தில் அவருக்கு நினைவு மண்டபம் எழுப்பும் பணி துவங்கி 1956 ஆம் ஆண்டு அந்த பணி முடிந்து தியான மண்டபத்துடன் கூடிய காந்தி நினைவு மண்டபம் செயல்பட துவங்கியது. இதுவரை சில முறை மட்டுமே பராமரிப்பு வர்ணம் பூசும் பணிகள் நடந்துள்ளன.இந்நிலையில் காந்திஜியின் 150 வது பிறந்த தின விழா இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரை மறந்தது போன்று நினைவு மண்டபத்தையும் மறந்துவிட்டார்களோ என்று நினைக்க தோன்றும் அளவில் அந்த மண்டபம் மோசமான நிலையில் உள்ளது. கடற் காற்று காரணமாக மண்டபத்தின் பல இடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. சுவர்கள் சிதலமடைந்து தொடர்ந்து சேதமான பாகங்கள் கீழே விழுந்து வருகிறது. தற்போது உள்ளே சுற்றுலா பயணிகள் நுழைய அச்சப்படும் நிலையில் உள்ளது.சர்வதேச அளவில் பலர் சுற்றி பார்த்து ரசிக்க வேண்டிய காந்தி நினைவு மண்டபம் இன்று பழடைந்து போகும் நிலை ஏற்படும் முன்பு அதனை தடுத்து நிறுத்த தமிழக அரசு முன் வரவேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.