ETV Bharat / state

இந்தியாவில் 70ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி - முத்தரசன்

author img

By

Published : Aug 24, 2019, 10:02 PM IST

கன்னியாகுமரி: கடந்த 70ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என நாகர்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

The economic crisis of not much in 70 years-cpi-mutharasan


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்," நாட்டின் பொருளாதாரம் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.

மோட்டார் வாகனம் உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பால் இதுவரை 1லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். தற்போது உள்ள சூழ்நிலையில் வேலை வாய்ப்பின்மை பலமடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்ற மத்திய அரசின் முடிவுகளாலும் மோசமான பொருளாதாரக் கொள்கைகளாலும் தொழில் நிறுவனங்கள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வங்கிகளில் இருந்து பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்த கடனை திரும்ப பெற எந்த வித நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை.

நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை பிரச்னையை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கில் பரபரப்பையும் பதற்றத்தையும் மத்திய அரசு உருவாக்கிவருகிறது. மத்திய அரசு சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுத்தப் பார்க்கிறது. இதனை எதிர்த்து நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராட வேண்டும்" என்றார்.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்," நாட்டின் பொருளாதாரம் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.

மோட்டார் வாகனம் உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பால் இதுவரை 1லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். தற்போது உள்ள சூழ்நிலையில் வேலை வாய்ப்பின்மை பலமடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்ற மத்திய அரசின் முடிவுகளாலும் மோசமான பொருளாதாரக் கொள்கைகளாலும் தொழில் நிறுவனங்கள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வங்கிகளில் இருந்து பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்த கடனை திரும்ப பெற எந்த வித நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை.

நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை பிரச்னையை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கில் பரபரப்பையும் பதற்றத்தையும் மத்திய அரசு உருவாக்கிவருகிறது. மத்திய அரசு சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுத்தப் பார்க்கிறது. இதனை எதிர்த்து நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராட வேண்டும்" என்றார்.

Intro:கன்னியாகுமரி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது கேள்விக்குறியாக உள்ளது. மத்திய அரசு தானும் ஏமாந்து மக்களையும் ஏமாற்றும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.


Body:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு இன்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிநிலை பிரச்சனையை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கில் பரபரப்பையும் பதற்றத்தையும் மத்திய அரசு உருவாக்கி வருகிறது. நாட்டில் 70 ஆண்டுகள் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடி இருபதாக பொருளாதார வல்லுனர்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தி உள்ளனர்.

மோட்டார் வாகனம் உட்பட பல்வேறு தொழில்துறை மிகவும் பாதிகப்படுள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் நாட்டில் வேலை வாய்ப்பின்மை பலமடங்கு அதிகரிக்கும். மத்திய அரசு கையாண்டு வரும் பொருளாதார கொள்கையினால் தொழில் நிறுவனங்கள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பினால் ஏற்ப்பட்ட பாதிப்பின் உச்சம் தான்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிநிலை பிரச்சனையை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கில் பரபரப்பையும் பதற்றத்தையும் மத்திய அரசு உருவாக்கி வருகிறது.
மத்திய அரசு சர்வாதிகார ஆட்சி செய்கிறது. இது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதனை எதிர்த்து அனைவரும் இணைந்து போராடவேண்டும்.

தேசிய கல்வி கொள்கை குறித்து ரகசியமாக கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது தவறு.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு என்பது கேள்விக்குறியாக உள்ளது. சட்ட ஒழுங்கை நிலைநாட்ட அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை.
மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சில திட்டங்கள் அறிவித்துள்ளார். இது எந்த அளவிற்கு பலன் தரும் என தெரியவில்லை.

தேசிய வங்கிகளில் இருந்து கார்பரேட் நிறுவனங்களுக்கு கடன் கொடுத்துவிட்டு வரா கடன் என பெயர் சூட்டிவிட்டு அவர்களிடம் இருந்து கடனை திரும்ப பெற எந்த நடவடிக்கைகளும் அரசு எடுக்கவில்லை.
நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து நிதி அமைச்சர் சொல்வது சரியா அல்லது பொருளாதார நிபுணர்கள் சொல்வது சரியா என மக்களுக்கு அவர்களே விளக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.