ETV Bharat / state

மின்னல் வேகத்தில் வந்த சொகுசு கார்... தூக்கி வீசப்பட்ட 3 பேர்.. வைரலாகும் சிசிடிவி காட்சி

தக்கலையில் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார், பைக் மற்றும் ஆட்டோ மீது மோதிய விபத்தில் மூன்று பேர் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

author img

By

Published : Aug 23, 2022, 9:34 PM IST

மின்னல் வேகத்தில் வந்த சொகுசு கார்... தூக்கி வீசப்பட்ட 3 பேர்.. வைரலாகும் சிசிடிவி காட்சி
மின்னல் வேகத்தில் வந்த சொகுசு கார்... தூக்கி வீசப்பட்ட 3 பேர்.. வைரலாகும் சிசிடிவி காட்சி

கன்னியாகுமரி: அழகியமண்டபம் தக்கலை தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அதிவேகத்தில் வந்த கேரளப்பதிவெண் கொண்ட கார், தக்கலை பகுதியில் வரும்போது கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்று கொண்டிந்த பைக் மற்றும் சரக்கு ஆட்டோ மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இதில் பைக்கில் இருந்த கணேசன் என்பவர், சொகுசு காரின் பானட் மீது சிக்கி காருடன் இழுத்துச்செல்லப்பட்ட நிலையில் ஆட்டோவில் இருந்த மணி மற்றும் மாகீன் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். மூவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த தக்கலை போலீசார் சொகுசு காரை ஓட்டி, வந்த நாகர்கோவில் பகுதியைச்சேர்ந்த அஸ்வந்த் பெஞ்சமின் என்பவரை கைது செய்தனர். இந்த நிலையில் அந்த சொகுசு கார், பைக் மற்றும் சரக்கு ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மின்னல் வேகத்தில் வந்த சொகுசு கார்... தூக்கி வீசப்பட்ட 3 பேர்.. வைரலாகும் சிசிடிவி காட்சி

இதையும் படிங்க:குடிபோதையில் அரசுப்பேருந்தை இயக்கி பயணிகளை அலறவிட்ட ஓட்டுநர் பணியிடை நீக்கம்...

கன்னியாகுமரி: அழகியமண்டபம் தக்கலை தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அதிவேகத்தில் வந்த கேரளப்பதிவெண் கொண்ட கார், தக்கலை பகுதியில் வரும்போது கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்று கொண்டிந்த பைக் மற்றும் சரக்கு ஆட்டோ மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இதில் பைக்கில் இருந்த கணேசன் என்பவர், சொகுசு காரின் பானட் மீது சிக்கி காருடன் இழுத்துச்செல்லப்பட்ட நிலையில் ஆட்டோவில் இருந்த மணி மற்றும் மாகீன் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். மூவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த தக்கலை போலீசார் சொகுசு காரை ஓட்டி, வந்த நாகர்கோவில் பகுதியைச்சேர்ந்த அஸ்வந்த் பெஞ்சமின் என்பவரை கைது செய்தனர். இந்த நிலையில் அந்த சொகுசு கார், பைக் மற்றும் சரக்கு ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மின்னல் வேகத்தில் வந்த சொகுசு கார்... தூக்கி வீசப்பட்ட 3 பேர்.. வைரலாகும் சிசிடிவி காட்சி

இதையும் படிங்க:குடிபோதையில் அரசுப்பேருந்தை இயக்கி பயணிகளை அலறவிட்ட ஓட்டுநர் பணியிடை நீக்கம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.