ETV Bharat / state

உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து இசக்கியம்மன் கோயில் இடிப்பு! - Demolition of the temple court order

கன்னியாகுமரி: நாடு முழுவதும் நீர்நிலை பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, சாமிதோப்பு பகுதியிலிருந்த இசக்கியம்மன் கோயில் இடிக்கப்பட்டது.

நீர்நிலைகள் பகுதியிலிருந்த இசக்கியம்மன் கோயிலை மாவட்ட அலுவலர்கள் இடித்தனர்
author img

By

Published : Nov 26, 2019, 12:23 PM IST

கன்னியாகுமரி பொற்றையடியிலிருந்து சாமிதோப்பு செல்லும் வழியில் இசக்கியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வழிபாடு செய்வது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் நீர்நிலைப் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, இசக்கியம்மன் கோயிலை இடித்து அகற்ற நேற்று பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் வல்சன்போஸ், கன்னியாகுமரி துணைக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், ஆய்வாளர் முத்து ஆகியோர் வந்தனர்.

பின்னர் கோயிலை ஜேசிபி உதவியுடன் இடித்து அகற்றும் பணி நடந்தது. அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானோர் கோயிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

நீர்நிலைகள் பகுதியிலிருந்த இசக்கியம்மன் கோயிலை மாவட்ட அலுவலர்கள் இடித்தனர்

இதனையடுத்து அலுவலர்கள் கோயிலிலிருந்த சிலைகளைப் பத்திரமாக எடுத்துவிட்டு கோயிலை இடித்தனர். பின்னர் சிலைகள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
இதையும் படிங்க: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட செங்கற்கள் அனுப்பிய கிராம மக்கள்.!

கன்னியாகுமரி பொற்றையடியிலிருந்து சாமிதோப்பு செல்லும் வழியில் இசக்கியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வழிபாடு செய்வது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் நீர்நிலைப் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, இசக்கியம்மன் கோயிலை இடித்து அகற்ற நேற்று பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் வல்சன்போஸ், கன்னியாகுமரி துணைக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், ஆய்வாளர் முத்து ஆகியோர் வந்தனர்.

பின்னர் கோயிலை ஜேசிபி உதவியுடன் இடித்து அகற்றும் பணி நடந்தது. அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானோர் கோயிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

நீர்நிலைகள் பகுதியிலிருந்த இசக்கியம்மன் கோயிலை மாவட்ட அலுவலர்கள் இடித்தனர்

இதனையடுத்து அலுவலர்கள் கோயிலிலிருந்த சிலைகளைப் பத்திரமாக எடுத்துவிட்டு கோயிலை இடித்தனர். பின்னர் சிலைகள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
இதையும் படிங்க: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட செங்கற்கள் அனுப்பிய கிராம மக்கள்.!

Intro:உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து சானல் கரையோரம் கட்டப்பட்டிருந்த பொற்றையடி ஒற்றைபனை இசக்கியம்மன் கோயில் இடித்து அகற்றப்பட்டது அப்பகுதிமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் சில மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டதுBody:tn_knk_02_aggressive_disposal_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து சானல் கரையோரம் கட்டப்பட்டிருந்த பொற்றையடி ஒற்றைபனை இசக்கியம்மன் கோயில் இடித்து அகற்றப்பட்டது அப்பகுதிமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் சில மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது



பொற்றையடியில் இருந்து சாமிதோப்பு செல்லும் வழியில் உள்ள சானல் பகுதியில் ஒற்றைப்பனை இசக்கியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை நிர்வாகம் மற்றும் வழிபாடு செய்வது தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்சினை இருந்து வருகிறது. இது ம்பந்தமான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகள் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டதன் படி பொற்றையடியில் இருந்து சாமிதோப்பு வழியாக செல்லும் வெங்கலராஜன் சானல் அருகில் கட்டப்பட்டிருந்த ஒற்றைபனை இசக்கியம்மன் கோயிலை இடித்து அகற்ற இன்று பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வல்சன்போஸ், கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் வந்தனர். பின்னர் கோயிலை ஜேசிபி உதவியுடன் இடித்து அகற்றும் பணி நடந்தது. அப்போது அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானோர் கோயிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் முத்து அவர்களை சமாதானம் செய்து ஆக்கிரமிப்பு கோயிலுக்குள் இருந்த சிலையை உடையாமல் பாதுகாப்பாக எடுத்துவிட்டு கோயிலை இடித்து அகற்றினர். பின்னர் சுடலைமாடசாமி சிலையை அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்க முடிவு செய்து மினிடெம்போவில் சிலையை ஏற்றி கொண்டு சென்றபோது வாகனத்தை முற்றுகையிட்டு சிலையை அதேபகுதியில் வைக்கவேண்டும் என்று போலீசாரிடம் அப்பகுதிமக்கள் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு அதிகாரிகள் சிலை தாசில்தார் அலுவலகத்தில் பத்திரமாக வைக்கப்படும் .எப்போது வேண்டுமானாலும் நீங்கள் எழுத்து பூர்வமாக எழுதிகொடுத்து சிலையை பெற்றுகொள்ளலாம் என்று கூறினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது




Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.