ETV Bharat / state

கன்னியாகுமரி வந்தது ஒலிம்பிக் தீபம்

author img

By

Published : Jul 26, 2022, 12:01 PM IST

கன்னியாகுமரி வந்தடைந்த ஒலிம்பிக் தீபம் கிராண்ட் மாஸ்டர் நிலோபத் தாஸ் பெற்றுக்கொண்டார்.

கன்னியாகுமரி வந்தது ஒலிம்பிக் தீபம்; கிராண்ட் மாஸ்டர் நிலோபத் தாஸ் வசம் தமிழக அமைச்சர்கள் ஒலிம்பிக் தீபத்தை ஒப்படைப்பு!
கன்னியாகுமரி வந்தது ஒலிம்பிக் தீபம்; கிராண்ட் மாஸ்டர் நிலோபத் தாஸ் வசம் தமிழக அமைச்சர்கள் ஒலிம்பிக் தீபத்தை ஒப்படைப்பு!

கன்னியாகுமரி: இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில், சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. வரும் 28ம் முதல் ஆகஸ்ட் 10 வரை, செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இதற்கான விரிவான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. இந்த பிரம்மாண்ட செஸ் போட்டியை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போட்டி குறித்து நாடு முழுவதும் விழிப்புணாவு ஏற்படுத்தும் வகையில் கடந்த 19-ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி வந்தது ஒலிம்பிக் தீபம்; கிராண்ட் மாஸ்டர் நிலோபத் தாஸ் வசம் தமிழக அமைச்சர்கள் ஒலிம்பிக் தீபத்தை ஒப்படைப்பு!

இந்த ஜோதி நாடு முழுவதும் பயணித்து இன்று கன்னியாகுமரி வந்தடைந்தது. கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் ஒலிம்பியாட் தீபத்தினை கிராண்ட் மாஸ்டர் நிலோபத் தாஸ் வசம் தமிழக அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் ஒப்படைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் விளையாட்டு வீரர்கள் , அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 500 மில்லி கிராம் தங்கத்தில் செஸ் காயின் வடிவங்கள் செய்து அசத்திய தொழிலாளி !

கன்னியாகுமரி: இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில், சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. வரும் 28ம் முதல் ஆகஸ்ட் 10 வரை, செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இதற்கான விரிவான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. இந்த பிரம்மாண்ட செஸ் போட்டியை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போட்டி குறித்து நாடு முழுவதும் விழிப்புணாவு ஏற்படுத்தும் வகையில் கடந்த 19-ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி வந்தது ஒலிம்பிக் தீபம்; கிராண்ட் மாஸ்டர் நிலோபத் தாஸ் வசம் தமிழக அமைச்சர்கள் ஒலிம்பிக் தீபத்தை ஒப்படைப்பு!

இந்த ஜோதி நாடு முழுவதும் பயணித்து இன்று கன்னியாகுமரி வந்தடைந்தது. கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் ஒலிம்பியாட் தீபத்தினை கிராண்ட் மாஸ்டர் நிலோபத் தாஸ் வசம் தமிழக அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் ஒப்படைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் விளையாட்டு வீரர்கள் , அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 500 மில்லி கிராம் தங்கத்தில் செஸ் காயின் வடிவங்கள் செய்து அசத்திய தொழிலாளி !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.