ETV Bharat / state

ஊருக்குள் புகுந்த கடல்நீர்... ஓட்டம் பிடித்த மீனவர்கள்! - ராஜபாளையம் அருகே ஊருக்குள் புகுந்த கடல் நீர்

கன்னியாகுமரி: ராஜமங்கலம் அருகே மீனவ கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் அலறியடித்து வெளியேறினர்.

sea water
author img

By

Published : Aug 28, 2019, 12:55 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அழிக்கால் மீனவர் கிராமத்தில், கடந்த 22ஆம் தேதி கடல் சீற்றம் ஏற்பட்டது. அப்போது, கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் 100 வீடுகள் பாதிக்கப்பட்டன.

இதைத் தடுக்க ரூ.10 கோடி செலவில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என கடந்த ஆண்டு நாகர்கோவிலில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். ஆனால், இது வரையிலும் தூண்டில் வளைவு அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த கிராமத்தில் அடிக்கடி கடல் நீர் ஊருக்குள் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

ஊருக்குள் கடல் நீர்

இதைத் தொடர்ந்து, தூண்டில் வளைவு அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும், கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று மீண்டும் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டு சுமார் 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மீனவர்கள் அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனர். மேலும், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்காததால், ஊரையே காலி செய்து வெளியேறும் அவலநிலை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அழிக்கால் மீனவர் கிராமத்தில், கடந்த 22ஆம் தேதி கடல் சீற்றம் ஏற்பட்டது. அப்போது, கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் 100 வீடுகள் பாதிக்கப்பட்டன.

இதைத் தடுக்க ரூ.10 கோடி செலவில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என கடந்த ஆண்டு நாகர்கோவிலில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். ஆனால், இது வரையிலும் தூண்டில் வளைவு அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த கிராமத்தில் அடிக்கடி கடல் நீர் ஊருக்குள் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

ஊருக்குள் கடல் நீர்

இதைத் தொடர்ந்து, தூண்டில் வளைவு அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும், கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று மீண்டும் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டு சுமார் 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மீனவர்கள் அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனர். மேலும், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்காததால், ஊரையே காலி செய்து வெளியேறும் அவலநிலை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது.

Intro:கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே மீண்டும் கடல் சீற்றம். ஐம்பது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மீனவர்கள் அலறி அடித்து ஓட்டம். Body:tn_knk_01_alikaal_searough_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே மீண்டும் கடல் சீற்றம். ஐம்பது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மீனவர்கள் அலறி அடித்து ஓட்டம்.

ராஜாக்கமங்கலம் அருகே அழிக்கால் மீனவர் கிராமத்தில் கடந்த 22 – ம் தேதி கடல் சீற்றத்தினால் கடல் ஊருக்குள் புகுந்தது. இதில் 100 வீடுகள் பாதிக்கப்பட்டது. இந்த கிராமத்தில் கடல் நீர் ஊருக்குள் புகுவதை தடுக்க தமிழக முதல்வர் 10 கோடி போய் செலவில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என கடந்த ஆண்டு நாகர்கோவிலில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அறிவித்தார். ஆனால் இது வரையிலும் தூண்டில் வளைவு அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதனால் இந்த கிராமத்தில் அடிக்கடி தொடர்ந்து கடல் நீர் ஊருக்குள் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனைத்தொடர்ந்து தூண்டில் வளைவு அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கடல் நீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கல்லுக் கட்டி சந்திப்பில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினருமானசுரேஷ்ராஜன் தலைமையில் கடந்த 22 – ம் தேதி மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மேற்கு கடற்கரை சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாகர்கோவில் சப் கலெக்டர் விஷ்ணு சந்திரன் மறியலில் ஈடுபட்ட மீனவ பெண்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார். இந்நிலையில் இன்று மீண்டும் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டு சுமார் ஐம்பது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மீனவர்கள் அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனர்.தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் ஒரு ஊரையே காலி செய்து ஊரைவிட்டு வெளியேறும் அவலநிலை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டு உள்ளது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.