ETV Bharat / state

12ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு அடி, உதை! - 12ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர்

கன்னியாகுமரி: அரசுப் பள்ளியில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காலிக ஆசிரியரை பொதுமக்கள் அடித்து உதைத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

School girl molested by temporary teacher in kanniyakumari
School girl molested by temporary teacher in kanniyakumari
author img

By

Published : Dec 9, 2019, 7:01 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இடலாக்குடியில் சதாவதானி செய்குதம்பி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியில் பன்னிரென்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு, தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றிய சுரேஷ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அந்த மாணவி பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆசிரியரை தாக்கும் பொதுமக்கள்

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பள்ளியில் திரண்டு அந்த ஆசிரியரைப் பிடித்து அடிஉதை கொடுத்தனர். பின்னர் காவல் துறையினரிடம் அந்த ஆசிரியரை ஒப்படைக்கும்போதும், மக்கள் அவரை சரமாரியாகத் தாக்கினர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து ஆசிரியரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள்.

இதையும் படிங்க: ஆசிரியர் தாக்கி மாணவன் கை எலும்பு முறிவு!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இடலாக்குடியில் சதாவதானி செய்குதம்பி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியில் பன்னிரென்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு, தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றிய சுரேஷ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அந்த மாணவி பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆசிரியரை தாக்கும் பொதுமக்கள்

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பள்ளியில் திரண்டு அந்த ஆசிரியரைப் பிடித்து அடிஉதை கொடுத்தனர். பின்னர் காவல் துறையினரிடம் அந்த ஆசிரியரை ஒப்படைக்கும்போதும், மக்கள் அவரை சரமாரியாகத் தாக்கினர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து ஆசிரியரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள்.

இதையும் படிங்க: ஆசிரியர் தாக்கி மாணவன் கை எலும்பு முறிவு!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக ஆசிரியர் ஒருவரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Body:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இடலாக்குடியில் சதாவதானி செய்குதம்பி பாவலர் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் தற்காலிக ஆசிரியரான சுரேஷ் என்பவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த மாணவி பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் திரண்டு அந்த ஆசிரியரை பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்லும் போதும் அப்பகுதி மக்கள் அவரை சரமாரியாக தாக்கினர். இதனால் அப்பகுதியில் பரப்பு ஏற்பட்டது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.