ETV Bharat / state

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி ஆவணி திருவிழா! - சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி ஆவணி திருவிழா

கன்னியாகுமரி: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

samithoppu
author img

By

Published : Aug 23, 2019, 9:07 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இங்கு ஆண்டுதோறும் ஆவணி, வைகாசி, தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை முன்னிட்டு இன்று அதிகாலை முத்திரி பதமிடுதலைத் தொடர்ந்து நடை திறந்து திருவிளக்கேற்றுதல், கொடி பட்டம் தயாரித்தல், கொடியேற்றம் போன்றவை நடைபெற்றது. கொடியை குரு பால ஜனாதிபதி ஏற்றிவைத்தார். கொடியேற்றத்தையொட்டி சாமிதோப்பில் சென்னை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

அய்யா வைகுண்டசாமி ஆவணி திருவிழா

பின்னர் மதியம் வடக்கு வாசலில் அன்னதானம், இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதல் போன்றவை நடைபெறும். தொடர்ந்து நாளை முதல் வருகின்ற 29ஆம் தேதிவரை பல்வேறு வாகனங்களில் அய்யா தெருவீதி வலம்வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

மேலும், வருகின்ற 30ஆம் தேதி எட்டாம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், 31ஆம் தேதி இரவு அய்யா அனுமன் வாகனத்திலும், அடுத்த மாதம் (செப்டம்பர்) 1ஆம் தேதி இந்திர வாகனத்திலும் பவனிவருதலும் நடைபெறும். விழாவின் இறுதி நாளான 2ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இங்கு ஆண்டுதோறும் ஆவணி, வைகாசி, தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை முன்னிட்டு இன்று அதிகாலை முத்திரி பதமிடுதலைத் தொடர்ந்து நடை திறந்து திருவிளக்கேற்றுதல், கொடி பட்டம் தயாரித்தல், கொடியேற்றம் போன்றவை நடைபெற்றது. கொடியை குரு பால ஜனாதிபதி ஏற்றிவைத்தார். கொடியேற்றத்தையொட்டி சாமிதோப்பில் சென்னை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

அய்யா வைகுண்டசாமி ஆவணி திருவிழா

பின்னர் மதியம் வடக்கு வாசலில் அன்னதானம், இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதல் போன்றவை நடைபெறும். தொடர்ந்து நாளை முதல் வருகின்ற 29ஆம் தேதிவரை பல்வேறு வாகனங்களில் அய்யா தெருவீதி வலம்வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

மேலும், வருகின்ற 30ஆம் தேதி எட்டாம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், 31ஆம் தேதி இரவு அய்யா அனுமன் வாகனத்திலும், அடுத்த மாதம் (செப்டம்பர்) 1ஆம் தேதி இந்திர வாகனத்திலும் பவனிவருதலும் நடைபெறும். விழாவின் இறுதி நாளான 2ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது.

Intro:கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. Body:tn_knk_01_samithoppu_flag_script_TN10005

கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆவணி, வைகாசி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரிபதமிடுதல், தொடர்ந்து நடை திறந்து திருவிளக்கேற்றுதல், 5 மணிக்கு சிறப்பு பணிவிடை, அதிகாலை 6 மணிக்கு கொடி பட்டம் தயாரித்தல், தொடர்ந்து கொடியேற்றம் போன்றவை நடைபெற்றது. கொடியை குரு பால ஜனாதிபதி ஏற்றி வைத்தார்.ஆவணி திருவிழா கொடியேற்றத்தையொட்டி சாமிதோப்பில் சென்னை,நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலத்தை சேர்ந்த திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் மதியம் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதானம், இரவு 8 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதல் போன்றவை நடைபெறும். தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் பணிவிடை, மதியம் உச்சி படிப்பும், இரவு வாகன பவனி, உகப்படிப்பு, அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

24-ந் தேதி இரவு பரங்கி நாற்காலியிலும், 25-ந் தேதி அன்ன வாகனத்திலும், 26-ந் தேதி பூஞ்சப்பர வாகனத்திலும், 27-ந் தேதி மயில் வாகனத்திலும், 28-ந் தேதி கற்பக வாகனத்திலும், 29-ந் தேதி சிவப்பு சாத்தி கருட வாகனத்திலும் அய்யா தெருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

வருகிற 30-ந் தேதி எட்டாம் திருவிழா நடக்கிறது. அதை முன்னிட்டு வைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், 31-ந் தேதி இரவு அய்யா அனுமன் வாகனத்திலும், அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி இந்திர வாகனத்திலும் பவனிவருதலும் நடைபெறும்.
விழாவின் இறுதி நாளான 2-ந் தேதி மதியம் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.