ETV Bharat / state

அரிசி அரவை ஆலைகள் செயல்பட நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் கோரிக்கை!

author img

By

Published : Apr 7, 2020, 7:15 AM IST

கன்னியாகுமரி: அரிசி அரவை ஆலைகள் முழுமையாக செயல்பட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் போரிக்கை விடுத்துள்ளனர்.

rice farmers demand
rice farmers demand

கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தேரூர், அஞ்சுகிராமம், தாழாக்குடி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் ஐயாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி அறுவடை நடந்து முடிந்துள்ளது. கடந்த காலத்தில் இவ்வாறு அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாக கட்டி நெல் கொள்முதல் செய்யப்படும் இடங்களுக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்வது வழக்கம்.

அதைத் தொடர்ந்து, நெல் மூட்டைகள் அரசி அரவை ஆலைகளுக்கு கொண்டு சென்று அரவை செய்து அரிசியாக்கப்பட்டு சந்தைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் காரணத்தினால் கூலி ஆள்கள் வெளியே வர அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், அரிசி அரவை ஆலைகளில் ஈரமான நெல்லை உலர்த்துவது, நெல் அரவை இயந்திரங்களை இயக்குவது, அரிசியை மூட்டைகளாக கட்டுவது, தவுடுகளை பிரிப்பது உள்ளிட்ட வேலைகளுக்கு கடும் ஆட்கள் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது.

இதனால் குமரி மாவட்டத்தில் அரிசி ஆலைகளில் வேலை செய்வதற்கு ஆட்கள் இல்லாமல் பெரும்பாலான ஆலைகள் இயங்காமல் மூடப்பட்டுள்ளன. இதனால், விவசாயிகளிடமிருந்து நெல்மூட்டைகளை நெல் கொள்முதல் நிலையங்கள் கொள்முதல் செய்ய மறுக்கின்றன. இதன் காரணமாக பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அனைத்தும் விவசாயிகளின் வீடுகளிலும் குடோன்களிலும் தேக்கம் அடைந்துள்ளன. இதனிடையே, அரிசி உற்பத்தி செய்வதில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலை தொடருமானால் வரும் காலங்களில் தமிழ்நாட்டில் கடும் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகும். எனவே அரிசி ஆலைகள் முழுமையாக இயங்கவும் மேலும் விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து தேக்கமடைந்துள்ள நெல்மூட்டைகள் சீராகவும் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:உணவின்றி தவித்த குரங்குகளுக்கு உணவளித்த சமூக ஆர்வலர்கள்!

கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தேரூர், அஞ்சுகிராமம், தாழாக்குடி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் ஐயாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி அறுவடை நடந்து முடிந்துள்ளது. கடந்த காலத்தில் இவ்வாறு அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாக கட்டி நெல் கொள்முதல் செய்யப்படும் இடங்களுக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்வது வழக்கம்.

அதைத் தொடர்ந்து, நெல் மூட்டைகள் அரசி அரவை ஆலைகளுக்கு கொண்டு சென்று அரவை செய்து அரிசியாக்கப்பட்டு சந்தைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் காரணத்தினால் கூலி ஆள்கள் வெளியே வர அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், அரிசி அரவை ஆலைகளில் ஈரமான நெல்லை உலர்த்துவது, நெல் அரவை இயந்திரங்களை இயக்குவது, அரிசியை மூட்டைகளாக கட்டுவது, தவுடுகளை பிரிப்பது உள்ளிட்ட வேலைகளுக்கு கடும் ஆட்கள் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது.

இதனால் குமரி மாவட்டத்தில் அரிசி ஆலைகளில் வேலை செய்வதற்கு ஆட்கள் இல்லாமல் பெரும்பாலான ஆலைகள் இயங்காமல் மூடப்பட்டுள்ளன. இதனால், விவசாயிகளிடமிருந்து நெல்மூட்டைகளை நெல் கொள்முதல் நிலையங்கள் கொள்முதல் செய்ய மறுக்கின்றன. இதன் காரணமாக பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அனைத்தும் விவசாயிகளின் வீடுகளிலும் குடோன்களிலும் தேக்கம் அடைந்துள்ளன. இதனிடையே, அரிசி உற்பத்தி செய்வதில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலை தொடருமானால் வரும் காலங்களில் தமிழ்நாட்டில் கடும் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகும். எனவே அரிசி ஆலைகள் முழுமையாக இயங்கவும் மேலும் விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து தேக்கமடைந்துள்ள நெல்மூட்டைகள் சீராகவும் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:உணவின்றி தவித்த குரங்குகளுக்கு உணவளித்த சமூக ஆர்வலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.