தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று (டிச.9) புதிய கிளை நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அதன் தலைவர் முத்துகுமார் கூறுகையில், "நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் முன்வைக்க உள்ளோம். தற்போது எங்களுக்கு நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.
ஆன்லைன் வர்த்தகத்தால் இந்திய பொருளாதாரம் சரிவில் உள்ளது. பொதுமக்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிகளவு மோகம் காட்டுகின்றனர்.
இதிலிருந்து அவர்கள் வெளியில் வர வேண்டும். ஜிஎஸ்டி வசூல் அனைத்தும் மத்திய அரசிடம் நேரடியாக செல்கிறது. இதை மாநில அரசு வேடிக்கை பார்க்கிறது. ஜிஎஸ்டி வசூலில் குறிப்பிட்ட சதவீதத்தை எங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். இதுதொடர்பாக டிசம்பர் 9 ஆம் தேதி சென்னையில் விழிப்புணர்வு மாநாடு நடத்த உள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: அரசு தடை உத்தரவால் முடிவுக்கு வருமா ஆன்லைன் சூதாட்டம்?